திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தாழையுத்து ஊராட்சியில் கலைஞர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி மருத்துவ முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சிலம்பரசன், திமுக ஒன்றிய செயலாளர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.