வானூர், டிச.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் கலைக்குழுக்கள் பிரச்சாரம் செய்து வரு கின்றனர், புதன்கிழமை(டிச.25) வானூர் வட்டத்தில் சேலம் மாங்குயில் கலைக்குழு வினர் 15 மையங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். திருவக்கரையில் துவங்கிய பிரச்சாரம் சிறுவை, காரக் கேணி, கரசானூர், வானூர், கிளியனூர், நல்லாவூர், உப்பு வேலூர், எடச்சேரி, கொஞ்சி மங்கலம், தைலாபுரம், திருச்சிற்றம் பலம் கூட்ரோடு பொம்மையார்பாளையம், முதலியார் சாவடி,கோட்டக்குப்பம் ஆகிய 15 மையங்களில் நடைபெற்றது. மாநில மாநாட்டை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கே. முருகன், வட்டச் செயலாளர் எஸ்.பால முருகன், வட்டக் குழு உறுப்பினர்கள் கே.மாயவன், ஐ.சேகர், வி. சுந்தரமூர்த்தி என். அசோத்தாமன் ஆர்.விஸ்வநாதன் திரு வக்கரை ஆர்.ரவிச்சந்திரன், சிபிஎம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜி.கங்கா தரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.