திருத்தணி கோட்டத்திற்குட்பட்ட வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமாருக்கு மாவட்ட ஆட்சியர் சிறந்த மக்கள் பணியாளருக்கான விருது வழங்கியதை பாராட்டும் வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் அந்தோணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தவிச மாவட்ட துணை தலைவர் அப்சல் அகமத், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னதுரை, தமுஎகச திருத்தணி ஒன்றிய தலைவர் சின்னப் பையன் வடிவேல் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர்.