districts

சென்னை முக்கிய செய்திகள்

சிபிஎம் கிளை மாநாடுகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிபிஎம் கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கிளை செயலாளர்கள் விவரம்:
கும்மிடிப்பூண்டி வட்டம்
மேல்முதலம்பேடு கிளை - எஸ்.கோவிந்தராஜ்
திருப்பேடு பி கிளை - சுரேஷ்
முத்துரெட்டி கண்டிகை கிளை - சேகர்
சூரவாரி கண்டிகை கிளை - கந்தசாமி
கோரிமேடு கிளை - வி.ஜி.மணி
கும்மிடிப்பூண்டி நகர கிளை - மதன்
கும்மிடிப்பூண்டி 6 வது வார்டு கிளை - கே.அர்ஜுனன்
பெத்திக்குப்பம் கிளை - அரசு
வழுதலம்பேடு பி கிளை - எம்.மாரி
மங்காவரம் கிளை - எம்.குணசேகரன்
அப்பாவரம் கிளை - எம்.மனோகரன்
அப்பாவரம் பெண்கள் கிளை - ஆர்.செல்வி
மகாலிங்கம் நகர் கிளை - எஸ்.செல்வம்
மேட்டுக்குப்பம் கிளை - கௌதமன்
ஆரம்பாக்கம் ஜீவானந்தம் கிளை - நல்லம்மாசுபேதா
லட்சுமிஷேகால் கிளை - ரஷிமா
சிங்காரவேலர் கிளை - கதிர்பாஷா
ஈகுவார்பாளையம் கிளை - ரவி
மாதர்பாக்கம் கிளை - கோபால்
திருத்தணி வட்டம்
கங்கா நகர் கிளை - கோபால்
தாழவேடு கிளை - லதா
புதிய வெங்கட்டாபுரம் கிளை - அமராவதி
ஆர்டிஓ சத்தியா நகர் கிளை - கஸ்தூரி
கோரமங்கலம் கிளை - சஞ்சம்மா
அடூர் கிளை - சந்திரா
செருக்கனூர் பங்களாமேடு கிளை- விநாயகம்
பகத்சிங் நகர் கிளை - கோபி
பெரிய கடம்பூர் கிளை - வெற்றி
பீரகுப்பம் கிளை - பார்த்திபன்
கே.ஜி.கண்டிகை கிளை - ஜே.தேசன்
மீஞ்சூர் ஒன்றியம்
மெரட்டூர் கிளை - அகிலன்
 பழவேற்காடு கிளை - மோகன் 
தோனிரேவு  கிளை - விநாயகமூர்த்தி 
கவுண்டர்பாளையம் கிளை - சிவா  
கே.ஆர்.பாளையம் கிளை - வினோத்குமார் 
மீஞ்சூர் நகர் கிளை -துரைராஜ் 
நாலூர் அண்ணாநகர் கிளை - ஹரி பாபு 
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மத்திய சென்னை மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டத்தில் நடைபெற்ற கிளை மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்களின் விவரம்:
ஆயிரம் விளக்கு பகுதி
ஆட்டோ மேற்கு - பி.கருணாகரன்
112வது வட்டம் - ஜி.சிந்தன்
நமசிவாயபுரம் - ஜெய்சங்கர்
நமசை பெண்கள் - இந்திராணி
புஷ்பாநகர் - பி.வெங்கடேசன்
புஷ்பாநகர் பெண்கள் - பி.பரமேஷ்வரி
ஜெயலட்சுமிபுரம் - எஸ்.கோபாலகிருஷ்ணன்
தர்மாபுரம் - டி.சுரேந்திரன்
பார்த்தசாரதிபுரம் ஏ - கே.அப்புக்குமார்
பார்த்தசாரதிபுரம் பி - எஸ்.அருண்குமார்
மார்க்கெட் - மூ.வீரக்குமார்
ஆட்டோ கிழக்கு - என்.சாமிநாதன்
ஆட்டோ வடக்கு - எல்.புவனேஷ்வரன்
113 பென்கள் - எம்.அஞ்சலி
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி பகுதி
சிவராஜ்புரம் பெண்கள் - கே.காந்திமதி
பார்த்தசாரதி ஆட்டோ - கு.த.ராஜி
மெரினா - டி.குமார்
சிந்தாதிரிப்பேட்டை - எஸ்.குணசீலன்
மீர்சாகிபேட்டை - கே.முகமது அப்சர்  
திருவட்டீஸ்வரன் பேட்டை - ஆர். னிவாசன்
ஐந்து குடிசை - எஸ்.சாந்தகுமார்
பாடர் தோட்டம் - எ.நாகராஜ்
வழக்கறிஞர் இடைக்குழு
வழக்கறிஞர் கிளை 1 - எஸ்.ஷினு
வழக்கறிஞர் கிளை 2 - இ.வினோத் குமார்
வழக்கறிஞர் கிளை 3 - என்.ஸ்டாலின்

சென்னையில் சொத்துவரி உயர்வு அக்.1 முதல் அமல் 

சென்னை,செப்.28- சென்னை மாநகராட்சியில் 6 மாதத்துக்கு ஒரு முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், 2025-26-ம் ஆண்டுக்கான சொத்துவரி அடுத்த மாதம் முதல்  கணக்கீடு செய்யப்படும். எனவே, இந்த உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் நடை முறைப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரம்பரை முடி உதிர்தலுக்கு  புதிய தொழில்நுட்பத்தில் தீர்வு

சென்னை, செப். 28- பரம்பரை முடி உதிர்தலுக்கு புதிய தொழில்நுட்பத்தில் தீர்வு காணப்படும் என்று ஹோமியோபதி மருத்துவ மனைகளில் ஒன்றாக திகழும் டாக்டர் பத்ராஸ் ஹெல்த்கேர்  தெரிவித்துள்ளது.  பெண்கள் மற்றும் ஆண்களுக்கான முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கவும் பரம்பரை முடி உதிர்தலுக்கு எக்சோசோம் அடிப்படையில் சிறந்த சிகிச்சை  அளிக்கவும் இந்தியாவின் முதல் மற்றும் உலகின் அதிநவீன  ‘எக்சோஜென்’ என்னும் சிகிச்சை முறையை சென்னையில் இந்த மருத்துவமனை அறிமுகம் செய்தது. சக்திவாய்ந்த மருத்துவ முறையை பயன்படுத்தி பரம்பரை முடி உதிர்வு தடுக்கப்படுவதோடு, இதற்கான பலன்  மூன்று மாதங்களில் தெரியும் என்றும் இம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.  எக்சோசோம் சிகிச்சையானது முடி  உதிர்தலுக்கு இயற்கையான மற்றும் அதிநவீன அணுகு முறையை வழங்குகிறது பாதிக்கப்பட்ட முடி செல்களைக் கண்டறிந்து அவற்றை சரி செய்கின்றன என்று டாக்டர் பத்ராஸ்  ஹெல்த்கேர் துணைத் தலைவர் டாக்டர் அக்ஷய் பத்ரா  கூறினார்.

நீர் பாசன மானியத் தொகை விவசாயிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்

திருவள்ளூர், செப் 28- திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கத்தில் வெள்ளியன்று (செப் 27) மாவட்ட ஆட்சித் தலைவர்  த.பிரபுசங்கர் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் 18 விவசாயிகளுக்கு நீர் பாசன  மானியத் தொகையாக தலா ரூ.50,000 வீதம் ரூ.9 இலட்சத்திற் கான காசோலையை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

போலி ஆவணம் தயாரித்து  ரூ.1.80 கோடி நிலம் விற்பனை: 2 பேர் கைது

அம்பத்தூர், செப். 28- போரூர் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.80 கோடி மதிப்புள்ள நிலத்தை  விற்பனை செய்த வழக்கில் பெண் உள்பட 2 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்  துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வாசுகி (52). சென்னை அண்ணா நகர் பகுதி யைச் சேர்ந்தவர் செந்தாமரை (54). இவர்கள்  இருவரும் அமெரிக்காவில் தங்கியிருந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் போரூர் அருகே கொளப்பாக்கம் பகுதியில் 8,280 சதுரடி கொண்ட ரூ.1.80 கோடி மதிப்பிலான நிலம்  உள்ளது. இவர்களது நிலத்தை திருவான்மி யூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (58) என்பவர் பொது அதிகா ரம் பெற்று கவனித்து வருகிறார்.  இதற்கிடை யில் சிவபிரகாசம் சமீபத்தில் மேற்கண்ட நிலங்களுக்கு வில்லங்கச் சான்று போட்டு  பார்த்த போது, வாசுகி நிலத்தை நிர்மலா தேவி என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து, அதை அவர் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அதேபோல் செந்தாமரைக்கு சொந்தமான  நிலத்தை குமார் என்பவர் போலி ஆவணங் கள் தயாரித்து வேறு நபர்களுக்கு விற்பனை  செய்ததும், இந்த மோசடி செயலுக்கு நந்தகுமார் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து சிவப்பிரகாசம் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார். இதையடுத்து நிலப் பிரச்சினை தீர்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, போரூர் அருகே உள்ள காரம்பாக்கம் பொன்னி நகரைச் சேர்ந்த நந்தகுமார் (49),  சென்னை துறைமுகம் மண்ணடி பகுதியைச்  சேர்ந்த நிர்மலா தேவி (38) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சென்னை பன்னோக்கு அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகளில் 25ஆயிரம் இதய சிகிச்சை

சென்னை, செப்.28 –  சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இதய இடை யீட்டு சிகிச்சை பிரிவான கேத் லேப் ஆய்வ கத்தில் 10 ஆண்டுகளில் 25,500 சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. உலக இதய நல தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் இதய நலத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தலை மையில் நடந்த பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவிகளின் விழிப் புணர்வு மவுனமொழி நாடகம், இதயம் நுரையீரல் மீட்பு முதலுதவி செயல்முறை பயிற்சி நடந்தது. இந்த நிகழ்வுகளில் மருத்து வமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார், நிலைய மருத்துவஅதிகாரி தளவாய் சுந்தரம், இதய நலசிகிச்சைத் துறை  தலைவர் கார்த்திகேயன், இதய இடை யீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணரும், பேராசிரியருமான செசிலி மேரி மெஜல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி கூறியதாவது: இந்த மருத்துவ மனையில் இதயவியல், புற்றுநோயியல், நரம்பியல் உட்பட10 உயர் சிறப்பு சிகிச்சைத் துறைகளும், 6 சிறப்பு சிகிச்சைத் துறைகளும் உள்ளன.அதில், இதய இடையீட்டு சிகிச்சைப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும்25,500 சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சையின்றி கால் அல்லது கை பகுதியில் சிறு துளையிட்டு ரத்தநாளங்கள் வழியாக இதய பாதிப்புகள் குணப்படுத்தப்பட்டுள்ளன. சீரற்ற இதயதுடிப்பு உள்ளவர்களுக்கும், குறிப்பாக இதயத் துடிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கும் எலெக்ட்ரிக் பிசியாலஜி ஸ்டடி மற்றும் அப்ளேசன் எனப்படும் சிகிச் சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. மொத்தம் 226 பேருக்கு அத்தகைய சிகிச்சை கள் மூலமாக இதய துடிப்பு சீராக்கப்பட் டுள்ளது. மகா தமனி வால்வு மாற்று சிகிச்சை  6 பேருக்கு ரத்த நாளங்களின் வழியாகவெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதய  குழாயில் உள்ள துவாரங்களை அறுவை சிகிச்சை இல்லாமல் அடைக்கும் ‘ஏஎஸ்டி’  எனப்படும் சிகிச்சை 276 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில்,அதிக அளவில் இளம்பெண்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல, இதயத்தின் மிட்ரல் வால்வு சுருக்கத்தை விரிவடையச் செய்யும் பிடிஎம்சி சிகிச்சை மூலம் 519 பேர் பயனடைந்துள்ளனர். மகாதமனி கிழிசலை சரிசெய்யும் ஆர்எஸ்ஓவி என்ற சிகிச்சை 11 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. 73 வயதான விவசாயி ஒருவருக்கு அந்த சிகிச்சைமூலம் ஏடிஓ என்ற உபகரணம் பொருத்தப்பட்டு அப்பிரச்சினை சரிசெய்யப்பட்டது. இதுபோன்ற சிகிச்சையானது 70 வயதைக் கடந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்படுவது உலகிலேயே இது முதல்முறை. இதைப் பாராட்டி ஐரோப்பிய சுகாதார இதழ் கட்டுரையும் வெளியிட்டிருந்தது. இவைதவிர, பேஸ்மேக்கர் உள்ளிட்ட  இதயத் துடிப்பை சீராக்கும் கருவிகளைப்  பொருத்தும் சிகிச்சைகளை மருத்துவர்கள்  சிறப்பாக செய்துள்ளனர். மருத்துவமனை யின் இதய இடையீட்டு சிகிச்சைநிபுணர்கள், மருத்துவர் செசிலி மேரிமெஜல்லா, மருத்துவர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் சாத்தியமாக்கியுள்ளனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள்  பாதுகாப்பு சட்டம்

சென்னை, செப். 28 - அடுக்குமாடி குடி யிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டம் விதி களை வகுத்து தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள் ளது. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அடுக்குமாடி குடி யிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள், கட்டு மான நிறுவனங்கள், பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை  பதிவு செய் வேண்டும். அடுக் குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம்  ஒன்றை நிறுவி, அதை பதிவு செய்ய வேண்டும். ஒரு சங்கத்தை உரு வாக்க குறைந்தபட்சம் நான்கு உரிமையாளர்கள் இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும். ஒரு சொத்தில் பல குடியிருப்புகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உரு வாக்கலாம். ஒவ்வொரு சங்கத்தின் தலைவர் மற்றும் பொருளாளர் கூட்ட மைப்பின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக திட்டமிடல் அதிகாரிகள் சான்றளித்தால், விரிவான மறுவடிவமைப்பு அறிக்கை யைத் தயாரிக்க சங்கங்கள் அனுமதிக்கப்படும். மறுவடிவமைப்பு திட்டம் முடிந்ததும், கட்டடத்தை காலி செய்யுமாறு உரிமை யாளர்களுக்கு சங்கம் நோட் டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

சிபிஎம் கிளை மாநாடுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டக்குடி வட்டத்தில் நடைபெற்ற கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கிளைச் செயலாளர்கள்:
 பெண்ணாடம் - பி.அரவிந்தன்
 திட்டக்குடி - டி.வரதன்
பெ.சொல்லத்தங்குறிச்சி - கே.எம். வீராசாமி
தி.அகரம் - எஸ்.மணிவாசகன்
காந்திநகர் - ஐ. மாயவன் 
வெண்கரும்பூர் - ஜி.மோகன்ராஜ்
 காரையூர் - ஆர். வேலாயுதம்
இடைச்செருவாய்  - டி.இளமங்கலம்
 தீவளூர் - ஆர். மாயவேல்
 கோனூர் - வி.டாடா
 தாழநல்லூர் - டி.வி.ராஜேந்திரன்
 கோடங்குடி - சி.குணசேகரன்
 கொரக்கவாடி - ஆர்.பாண்டியன்
 வடகராம்பூண்டி - டி.சண்முகம்
 தொளார் - ஆர்.செல்வராஜ்
 கூ.குடிகாடு - ஆர்.மகாராஜன்
 எறையூர் - பி.கலியமூர்த்தி
 மாளிகைக்கோட்டம்- கே.சிதம்பரம்
 பெரியகொசப்பள்ளம் - வி.ராஜப்பன்
 மேலூர் - கே. மாயவேல்
போத்திரமங்கலம் - ஜி.முத்துலட்சுமி
 ராமநத்தம் பழைய ரோடு - எஸ்.குமாரசாமி
ஆதமங்கலம் - பி.மாரிமுத்து
 சாத்தநத்தம் - கோ.கருப்பன்
ஆவினங்குடி - எஸ்.கொளஞ்சி மணி
அருகேரி - ஏ.பி.சுப்பிரமணியன்
 வையங்குடி - எம்.சின்னதுரை