அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்கி கால முறை ஊதியம் வழங்கக்கோரி நடைபெறும் மாநிலம் தழுவிய மாலை நேர கருப்பு தின ஆர்ப்பாட்டம் ஓசூர் ராம் நகரில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி தலைமையில் மாவட்டச் செயலாளர் தேவி, மாநில துணைத் தலைவர் கோவிந்தம்மாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைவர் வாசுதேவன், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் பார்வதி, நோக்கிரா, மாலா, ரோகினி, சித்ரா சிஐடியு மாவட்ட பொருளாளர் ஸ்ரீதரன், நிர்வாகிகள் பிரபாகர் மாதவன் கலந்து கொண்டனர்.