கடலூர், ஜூலை.9- கடலூர் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் பகுதியையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினசரி ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலம் வலுவிழந்து உள்ளதால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. விழுப்புரம்- புதுச்சேரி, கடலூர்- நாகை வரை 4 வழி சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் கெடிலம் ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு உயர்மட்ட பாலம் புதிதாக அமைக்க சுமார் ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. தற்போது தூண்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கெடிலம் ஆற்றில் உள்ள ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய இரும்பு பாலத்தை முற்றிலும் இடிப்பதற்கான பணி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொடங்கியுள்ளது. அருகில் உள்ள பாலத்தில் எந்தவித தடுப்பு வசதியும் இல்லாமல் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலம் இடிப்பதற்கான பணிகள் நடை பெறு வதற்கான எச்சரிக்கை பலகை யும் அந்த பகுதியில் வைக்கப்பட வில்லை. நூற்றாண்டுகள் பழமையான பாலம் என்பதால் இடிப்பதற்கு இயந்திரத்தால் முடியாமல் தடுமாறி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பாலத்தின் மீது செல்லும் இரும்பு பைப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு கிரேன் இயந்திரங்கள் ஆற்றுக்குள்ளே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தற்போது எந்தவித முன்னெச்ச ரிக்கையும் மேற்கொள்ளாமல் தற்போது பாலத்தை இடிப்பதால் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.