districts

img

குடியிருப்பு அருகிலேயே தொகுப்பு வீடு கட்டவேண்டும்

திருவள்ளூர், டிச 20- ஏனம்பாக்கம் ஊராட்சி யில் தற்போது குடியிருக்கும் இடத்திலேயே தொகுப்பு வீடுகள் கட்ட   ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகிலுள்ள ஏனம்பாக்கம் கிராமத்தில் கிராமநத்தம் நிலத்தில் இருளர் இனத்தை சேர்ந்த 14 குடும் பங்கள் கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக சர்வே எண் 27 ல் வசித்து வருகின்ற னர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டத்தின் விளைவாக 2022 ஆம் ஆண்டு 14 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தற்போது வாழும் இடத்திலேயே பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.  அந்த கோரிக்கையை ஏற்கா மல்  அதே சர்வே எண் கொண்ட ஓடையில் குடி மனையை வருவாய்த் துறையினர் ஒதுக்கியுள்ளது. இதற்கு சங்க தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இருளர்  இன மக்கள் என்றாலே எல்லா உரிமைகளும் மறுக் கப்பட்டு வருகிறது. பட்டா  கொடுத்தாலும், ஒதுக்கு புறமான இடங்களிலேயே அதிகாரிகள் தேர்வு செய்கின்றனர். இதுவும் ஒரு வகையில்  தீண்டாமையை கடைப்பிடிப் பதாகும். 5 அடி பள்ளத்தில் வீட்டு மனைகளை ஒதுக்கி னால் சாதாரண ஏழை, எளிய  மக்களால் எப்படி தொகுப்பு வீடுகளை கட்ட முடியும்.இந்த நிலையில் எல்லாபுரம் பிடிஒ தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பள்ளத்தில் ஒதுக்கியதற்கு பதிலாக தற்போது குடியிருக்கும் இடத்திலேயே பட்டா வழங்க  வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  செவ்வாயன்று (டிச 19),  ஊத்துக்கோட்டை வட்டாட் சியரிடம் மனு அளித்துள்ள னர்.