சென்னை, நவ.9 - பொதுத்துறை நிறுவனங்களை தக்க வைக்கவும் நிரந்தரமான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் வருங்காலத்தில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலை வர் அமானுல்லாகான் கூறினார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தின் சென்னை பகுதி-1ன் 67வது மாநாடு சனிக்கிழமையன்று (நவ.9) ராயப் பேட்டையில் தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: நாட்டில் எப்படி ஜனநாயகம் தோற்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாம்சங் தொழி லாளர்கள் நடத்திய போராட்டத்தை மாநில அரசு எவ்வாறு கையாண்டது என்பதை நன்கு அறிவோம். அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமை தொடர்பான கோரிக்கை களைதான் சாம்சங் ஊழியர்கள் ஜனநா யக முறைப்படி எழுப்பினார்கள். தொழிற்சாலை ஜனநாயக முறைப்படி இது அவர்களுக்கான அடிப்படை உரிமை சம்மந்தப்பட்டதாகும். நாம் எத்தகைய சமூகத்தை கட்டமைக்கப் போகிறோம். தொழிற்சங்க இயக்கத்தில் வெளிப்புற சக்திகள் எப்படி தலையீடு செய்கின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது ஆக்கப்பூர்வமாக அல்லது எதிர்மறையாக இருந்தாலும் அதை அறிந்து கொள்ளவேண்டும். எல்ஐசி-யில் நாம் தொழிற்சங்க இயக்கத்தை தொடங்கி பல ஆண்டு கள் ஆகிறது. முக்கியமான கோரிக் கைகளுக்காக போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். வலுவான சங்கத்தை முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த இயக்க த்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இளம் தோழர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் நம்முன் பல்வேறு சவால்கள் உள்ளன. நமது வெற்றிக்கான காரணம் என்ன? அரசியல் தெளிவும், தத்து வார்த்த புரிதலும் இல்லாமல் எந்தப் போராட்டத்திலும் வெற்றிபெற முடி யாது. தொழிற்சங்கத்தையும் வலுவாக எடுத்துச்செல்ல முடியாது. ஊதியக் கோரிக்கைகளில் கணிசமான வெற்றியை ஈட்டினாலும் சில இழப்பு களையும் சந்தித்துள்ளோம். நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், யாருடன் பேச்சு நடத்துவது என்பதை நிர்வாகம் தான் முடிவு செய்கிறது. இந்தப் பிரச்சனை இன்று தீவிரமடைந்து வரு கிறது. நீண்டகாலமாக உள்ள உரிமை களை ஒரு சில நிமிடங்களில் பறித்து விடுகின்றனர். எல்ஐசி-யில் ஏஐஐஇஏ 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்று வரை தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீ கரிக்கவில்லை. சாம்சங் நிர்வாகமும் இதைத்தான் செய்கிறது. பெரும் பான்மை தொழிலாளர்கள் விரும்பும் சங்கத்தை அங்கீகரிக்காமல் அவர் களாகவே ஒரு தொழிற்சங்கத்தை ஏற்படுத்தி அதை அங்கீகரிக்க முன் வந்தார்கள். அரசும், தனியார் நிறுவ னங்களும் தொழிற்சங்கங்கள் இருக்கக்கூடாது என்று நினைக்கின் றன.
தொழிலாளர்களின் கோரிக் கைகளுக்காக சமரசமின்றி போராடும் அனுபவத்தை சாம்சங் போராட்டத் தில் மட்டுமல்ல, நமது எல்ஐசி ஊழியர் சங்க போராட்டத்திலும் பெற்றி ருக்கிறோம். 82 விழுக்காடு ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ள நமது சங்கத்தை இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், வங்கித் துறையில் ஏஐபிஇஏ மற்றும் என்சிபிஇ சங்கங்கள் 56 விழுக்காடு ஊழியர்களை உறுப்பி னர்களாக கொண்டுள்ள போதிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1992-93ல் 87ஆயிரம் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை ஊழியர்கள் இருந்தனர். இன்று அந்த எண்ணிக்கை 45 ஆயிரமாக குறைந்துள்ளது. சம்பளத்தை மட்டும் குறைக்க வில்லை ஊழியர்களையும் நிர்வாகம் குறைத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதில் முக்கிய பங்காற் றியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி கார ணமாக எதிர்காலத்தில் எல்ஐசி நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ஊழியர் களுக்கு மேல் தேவைப்படாது. இது போன்ற எதிர்காலம் நம்முன் உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை ஒரு நிறுவனம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், ஊழியர்கள் மட்டுமல்ல அந்த நிறு வனமும் சீர்குலைந்துவிடும். எல்ஐசி சந்தையில் தனியார் நிறுவனங்க ளுடன் போட்டிப்போட வேண்டி யுள்ளது. எனவே தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். அதேநேரத்தில் சமூகத்தில் எழும் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதில் ஒரு சமநிலை தேவைப்படுகிறது. பட்ட ப்படிப்பு முடித்துள்ள 45 விழுக்காடு இளைஞர்கள் வேலையற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கடமை பொதுத்துறை நிறுவனங் களுக்கு உள்ளது. மறுபுறம், எல்ஐசியில் 50 வயதை கடந்தவர்களால் ஆக்கப்பூர்வமான உற்பத்தி கிடைக்காவிட்டால் அவர்களை வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறது. வங்கியில் ஏற்பட்டதுபோல் எல்ஐசி- யில் ஏற்பட எத்தனை நாட்கள் ஆகும்? எனவே, நமது வேலையும் பாது காப்பானது அல்ல. ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதிக லாபத்தை ஈட்ட நிர்வாகம் திட்ட மிடுகிறது. எனவே காலிப் பணியிடங் களை நிரப்ப புதிதாக ஊழியர்களை நிய மிக்க கோரி நாம் போராட வேண்டி யுள்ளது.
2047ல் ஒவ்வொரு இந்தியனும், தனது பாக்கெட்டில் காப்பீடு பாலிசியை வைத்திருக்க வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் (ஐஆர்டிஏ) கூறு கிறது. நிறுவனம் என்ற முறையில் எல்ஐசி இதனை வரவேற்கும். இத னால் அதன் வணிகம் அதிகரிக்கும். ஆனால் குடிமகன் என்ற முறையில் இதை எதிர்க்கிறேன். இந்தியாவில் இது எப்படி சாத்தியமாகும்? மொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காட்டி னர் (20 கோடி மக்கள்) மிக மோச மான வறுமையில் உள்ளனர் என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. இது ஒட்டுமொத்த பிரேசில் மக்கள் தொகைக்கு சமமானது. அவர்க ளால் எப்படி காப்பீட்டு பாலிசியை வாங்க முடியும்? எல்லோர்கையிலும் காப்பீட்டு அட்டை இருக்க வேண்டும் என்றால் அவர்கள் கையில் பணம் புழங்க வேண்டும். அதற்கு வேலைவாய்ப்பு இருக்க வேண்டும். அந்த வேலை வாய்ப்பும் நிரந்தரத் தன்மை கொண்ட தாக இருக்க வேண்டும். ஆனால், நிரந்தர ஊழியர்களே கூடாது, ஒப்பந்த ஊழியர்கள்தான் இருக்க வேண்டும் என்று நிர்வாகம் கூறுகிறது. அப்படி யென்றால் பணப்புழக்கம் எப்படி இருக்கும்? இந்த நிலையில் காப்பீட்டுத் துறையில் மேலும் பல மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று ஐஆர்டிஏ கூறுகிறது. ஏற்கெனவே பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முகவர் களின் கமிஷன் தொகை குறைக்கப்பட் டுள்ளது. இதனால்,அவர்கள் போரா ட்டம் நடத்தி வருகிறார்கள். எல்ஐசி வர்த்தகத்தில் 91 விழுக்காடு முகவர்கள் மூலமாக வருகிறது. எல்ஐசி-யில் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் வரும் வகையில் மாற்றங்களை செய்ய வேணடும் என்று ஐஆர்டிஏ கூறுகிறது. குறைந்தபட்ச முதலீட்டுடன் பல தனியார் நிறுவனங்களை இந்த துறையில் அனுமதிக்க நாடாளு மன்றம் அல்ல, ஐஆர்டிஏ-வே முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோருகிறது. எனவே, காப்பீட் டுத்துறையில் பொதுத்துறையின் இருப்பை தக்கவைக்க எதிர்காலத் தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான போராட் டத்தை தலைமையேற்று நடத்த இளைய தலைமுறையினர் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அமனுல்லாகான் பேசினார். பொதுமாநாட்டிற்கு சங்கத்தின் சென்னை பகுதி-1ன் தலைவர் கே.கிரிதர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் வரவேற்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், சங்கத்தின் சென்னை பகுதி-2ன் தலை வர் மனோகர் உள்ளிட்டோர் பேசினர். இணைச் செயலாளர் டி.ரமேஷ் நன்றி கூறினார்.