புதுச்சேரி, ஜூலை 11- சுகாதாரத்துறையில் வாரிசுதாரர் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சுகாதாரத் துறையில், கடந்த 2016 ஆம் ஆண்டு 109 விண்ணப்பதாரர்கள் 88 பேருக்கு வாரிசுதாரர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இவர்கள் அனை வரும் தகுதி உள்ளவர்கள் தானா? என்பது கேள்வியாக இருக்கிறது. காரணம், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பணத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு, சீனியாரிட்டி என்கிற போர்வையில் பணி ஆணை வழங்கிய தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டு வரை, வாரிசுதாரர் பணி நியமனத்திற் கான விண்ணப்பம் செய்த 21 நபர்களின் விண்ணப்பம் 2016 ஆம் ஆண்டு நடந்த சரிபார்ப்புக் குழு கூட்டத்தில் வைக்கப்பட்டது. அப்போது, தகுதி இல்லாத விண்ணப்பங்கள் என்று நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த வாரிசுதாரர் களுக்கு பணி வழங்கும் நோக்கத்தில் 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பணி நியமனத்திற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு வாரிசுதாரர் பணி நியமனத் திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர் தனது தகுதிக்கு குறைவான வேலை என்பதால் அந்த வேலையை ஏற்க மறுத்துள்ளனர். தற்போது அந்த குடும்பத்தில் வேரு ஒரு நபருக்கு பணிவழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், விண்ணப்பம் பெற்று பரிசீலனை செய்து வருகின்றனர். எனவே, தகுதி இல்லாத வாரிசுதாரர் கள் ஒரு சிலரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பணி ஆணை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோப்புகளை நிராகரிப்போம்! இந்நிலையில், மீண்டும் முறை கேடாக தயாரித்த பட்டியலை கொண்டு வாரிசுதாரர் பணி நியமன கோப்புகள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப் பதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்ப தன் மூலம் உண்மையான வாரிசுதாரர் களுக்கு, வாரிசுதாரர் பணி நியமனம் என்பது எட்டாக்கனி ஆகிவிடும். ஆகவே, தற்போது தயாரிக்கப்பட் டுள்ள பணி ஆணை கோப்பு மறுசீலனை செய்து, தகுதி உள்ள வாரிசுதாரர் களுக்கு மட்டும் பணி ஆணை வழங்க வேண்டும். இல்லை என்றால் தலைமை செயலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிடும் போராட்டம் நடத்து வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது சம்மேளன கௌரவத் தலைவர் பிரேமதாசன், நிர்வாகிகள் நமச்சிவாயம், முனுசாமி, ஜவஹர்,மணிவண்ணன்,டேவிட் ஆகியோர் உடனிருந்தனர்.