கடலூர், செப்.15- உத்தரகாண்ட் நிலச்சரி வில் சிக்கிய அனைவரும் விரைவாக மீட்கப்பட்டு வரு கிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத் திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 30 பேர் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து தொடர முடியாமல் தவித்து வந்தனர். இந்த தகவல் அறிந்த தமிழக அரசு அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை களை எடுத்தது. இந்த நிலை யில் கடலூரில் செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆன்மீக சுற்றுலா சென்ற அனைவரும் நல முடன் இருப்பதாகவும், 3 ஹெலிகாப்டர்கள் மூலம் இதுவரை 15 பேர் மீட்கப் பட்டுள்ள நிலையில் எஞ்சிய வர்கள் உடனடியாக மீட்பதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ள தாக கூறினார். இவர்களை மீட்பதற்கு தமிழக அரசு முழு அளவில் முயற்சி மேற்கொண்டதால் விரைவில் மீட்கப்பட்டதாக வும், மீட்பு நடவடிக்கையில் துரிதம் காட்டிய தமிழக அரசுக்கு கடலூர் மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் மீட்க பட்டவர் களிடம் தமிழக முதல்வர் நலம் விசாரித்ததாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக வும், அவர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளை யும் செய்து தர தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விரைவில் தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.