districts

img

நீட் தேர்வை கண்டித்து அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்

முறையற்ற நீட்  தேர்வை ரத்து செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புக்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஐ பகுதிச் செயலாளர்  இரா.விஜயகுமார் தலைமையில் அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் அருகே புதனன்று (ஜூலை 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.கருணாநிதி, ஆர்.துரைசாமி, பி.மாரியப்பன், கோபி (சிபிஐ), ஆர்.கோபி, கே.சீனிவாசன், பொன்னுசாமி, வேலு (சிபிஎம்), ஜெ.சிக்கந்தர், தாமோதரன் (மதிமுக), ஞான முதல்வன், ராவண சங்கு (விசிக), ஆசிக் (மனிதநேய மக்கள் கட்சி), கார்வேந்தன் (திராவிடர் கழகம்), நாகராஜ் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.