கடலூர், டிச.25- கடலூர் டிஎஸ்பி ரூபன் குமாரின் செயலை கண்டித்து கடலூர் புதுப்பாளை யத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தலைநகரான கட லூரில் அரசியல் கட்சிகள் நடத்தும் ஜன நாயக ரீதியான போராட்டங்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். கடலூர் சார் ஆட்சியர் தலை மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட அனைத்து இடங்களிலும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒன்று கூடாதே, ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதே, என மிரட்டும் கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமார் மற்றும் ஆய்வாளரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செய லாளர் பி.துரை தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் டி.நாகராஜ், சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், விசிக மாவட்டச் செயலாளர் மு.செந்தில், மதிமுக துணை செயலாளர் ராஜ், தமிழக வாழ்வுரிமைக்கட்சி மாணவர் அணி செயலாளர் அருள்பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் கடலூர் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், துணை மேயர் பா.தாமரைச்செல்வன், சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் டி.மணி வாசகம், மதிமுக மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கம், திராவிட கழக மாவட்ட செயலாளர் க.எழிலேந்தி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.ரஹீம் மக்கள் அதிகாரம் பி.பாலு, பொது நல அமைப்பின் எஸ்.என் கே.ரவி, எம். சுப்பராயன் ஆகியோர் உரையாற்றினர்.