districts

சென்னை முக்கிய செய்திகள்

விமான சாகச நிகழ்ச்சி : விரிவான பாதுகாப்பு ஏற்பாடு

சென்னை, அக்.3- சென்னை மெரினாவில் அக்.6ம் தேதி நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு, ஆய்வு செய்தார். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க தேவையான நட வடிக்கைகள் எடுக்க காவல் துறை யினருக்கு அறிவுறுத்தினார். இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட போர் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த போர் விமான சாகச நிகழச்சி யில், 72 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.  தேஜாஸ், ரஃபேல் மற்றும் சுகோய் சு-30 எம்கேஐ போர் விமானங்கள் மற்றும் சாரங் குழுவின் ஹெலிகாப்டர்கள் உட்பட பல்வேறு இந்திய விமானப்படை விமானங்களும் சாகசத்தில் இடம் பெறுகின்றன. இதற்கு பொது மக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர், முதல்வ ர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். இதனால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரீசர் பாக்ஸில்  மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயம்

கடலூர்,அக்.3 – கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (55). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (அக்.2) உயிரிழந்தார். இந்த நிலையில்,  லோகநாதன் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய இல்லத்தில்  பிரீசர் பெட்டியில் வைத்திருந்த நிலையில் அஞ்சலி செலுத்து வதற்காக பெட்டியில் கை வைத்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து அருகில் இருந்தவர்களை தூக்கி வீசியதில், மறைந்த  லோகநாதன் மனைவி சாந்தி ( வயது 50 ), தர்ஷினி  (17), வேம்பு (வயது 38), உமையாள் (வயது 50), ஆகிய  12 பேர் மயக்கமடைந்தனர். உடனே அருகில் இருந்த வர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகராட்சி வணிக வளாகத்திற்கு சீல்

கிருஷ்ணகிரி,அக்.3 - கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே  உள்ள வணிக வளாகத்தை நகராட்சி நிர்வாகம்  சில ஆண்டு களுக்கு முன்பு கண்ணன் குமுதாவிடம் குத்தகைக்கு விட்டது.  தரைத்தளம். முதல் தளம் என 21 கடைகள் உள்ளன. நகராட்சி அனுமதி பெறாமல் கட்டிடத்தில் பல மாற்றங் களை செய்தும், விதிமுறைகளை மீறியும் பல்பொருள் அங்காடியை நடத்தி வருகின்றனர். கடந்த 27 ஆம்  தேதி குத்தகை உரிமத்தை ரத்து செய்தும் கட்டிடத்தை  நகராட்சிக்கு ஒப்படைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப் பட்டதை அடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.