விலைவாசி உயர்வுக்கு எதிராக, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ரத்து செய்திடவும், பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராகவும் ஆலை மூடல் ஆட்குறைப்பு க்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் லாரன்ஸ் சாலையில் துண்டுப் பிரசுர விநியோகம் நிகழ்ச்சி நடைபெற்றது . மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி. சுப்பராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் மற்றும் மாநகர குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.