districts

img

பழவேற்காடு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பை தடுக்க ஆலோசனை

திருவள்ளூர், ஜன 9- திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் தீபாவளி, கிறிஸ்துமஸ்,பொங்கல், புத்தாண்டு மற்றும் ரம்ஜான் போன்ற விழா நாட்களின் போது, பழவேற்காடு கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் தவறி விழுந்து மரணம் அடைந்து வருகின்றனர். 2025 புத்தாண்டு தினத்தின் போது இரண்டு பேர் பழவேற்காடு கடலில் குளிக்க வந்து தண்ணீ ரில் தவறி விழுந்து மர ணம் அடைந்தனர். இதனை தடுப்பதற்கான வழி முறைகள் குறித்து அதிகாரி கள் பொதுமக்கள்  மீன வர்கள்  ஆலோசனை நடத்தினர்.  அதன்படி பழவேற்காடு சமூக அமைப்புகளின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மொய்தீன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் திருப்பாலை வனம் காவல் உதவி ஆய்வாளர் மனோவா செபாஸ்டின், தமிழ்நாடு கடலோர காவல்படை திருவள்ளூர் மாவட்ட உதவி ஆய்வாளர் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   வருவாய்த் துறையினர், பழவேற்காட்டில் இயங்கி வரும் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மீனவ சங்கங்கள்,மீனவ சங்கங்களின் பெண் பிரதி நிதிகள் மற்றும் மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக பொதுமக்கள் கூடும் பழவேற்காடு கடற்கரையில் விழா காலங்களில் கடற்கரையில் நுழைவதற்கு இடங்களை வரையறுத்து காவல் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆழ் கடல் ஆபத்து குறித்து சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைக்கவும் முடிவு செய்யப்பட்டது.