districts

சென்னை முக்கிய செய்திகள்

அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று  சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

திருவள்ளூர், நவ. 23- திருவள்ளூர் மாவட்டம் மாளந்தூர் - ஆவாஜிபேட்டை ஒன்றியசாலை அமைக்க இரண்டு வாரங்கள்கால அவகாசம் கேட்டுள் ளதால் நவம்பர் 25ஆம் தேதி சிபிஎம் சார்பில் நடைபெற இருந்த சாலை மறியல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என  சிபிஎம் சார்பில்  கடந்த ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு மாதத்தில் பணிகள் நடைபெறும் என வருவாய்த்துறை யினர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இது வரை எந்த பணியும் நடைபெறவில்லை. வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைக்க அனுமதி மறுக்கப்படு வதால் பணிகள் நிலுவையில் உள்ளது. இந்த பகுதியில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியதால் இந்த வழித்தடத் தில் இயங்கப்பட்ட தடம் எண் 92 பி, 73 ஏ, மாநகர பேருந்து 580 எம் ஆகியவை குறித்த நேரத்திற்கு வருவதில்லை. சில நாட்களில் பேருந்துகளே  இயக்கப்படுவதில்லை. சாலை அமைக்க வனத்துறையினர்  அனு மதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல முறை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகளிடம்  நினைவூட்டல் கடிதங்கள்  வழங்கப்பட்டுள்ளது. இருப்பி னும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 25 அன்று மாளந்தூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை (நவ. 23)  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் மாவட்ட துணை கண்காணிப்பாளர்  சாந்தி, துணை வட்டாட்சியர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடை பெற்று.  அப்போது 2 வாரம் கால அவகா சம் கேட்டுக் கொண்டதால் சாலை மறியல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், வட்ட செயலாளர் என்.கங்காதரன், வட்ட குழு உறுப்பினர்கள் ரமேஷ், குமார், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பைண்டிங் படிப்பு தொடர முடியுமா? பதில்தர உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, நவ. 23- 2024-25ஆம் கல்வியாண்டில் புத்தக பைண்டிங் படிப்பை தொடர முடியுமா? என தமிழ்நாடு அரசு பதில் தர சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்வைத்திறன் குறையுடையோருக்கான தேசிய கூட்ட மைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் புத்தக பைண்டிங் படிப்புக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறும் நடைமுறை இன்னும் துவங்கவில்லை. 1982இல் துவங்கப்பட்ட தொழிற் பயிற்சி மையத்தில் புத்தக பைண்டிங் படிப்பு அரசு நிதியுதவியு டன் நடத்தப்பட்டு வந்தது. புத்தக பைண்டிங் படிப்பை தொடந்து நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பூவிருந்தவல்லி பார்வை குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தக பைண்டிங் படிப்பை தொடர முடியுமா? என  தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.

தங்கம் விலை 5வது நாளாக உயர்வு

தங்கம் விலை 5வது நாளாக உயர்வு சென்னை,நவ.23- சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சனிக்கிழமை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து  ரூ.57,800-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,225-க்கு விற்பனையானது. 

வீட்டின் பூட்டை உடைத்து  20 சவரன் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து  20 சவரன் நகை கொள்ளை சென்னை, நவ. 23- புழல் அடுத்த புத்தகரம் துரைசாமி நகரை சேர்ந்த வர் தனலட்சுமி (50). இவர் முகப்பேரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வரு கிறார். இவருடைய கணவர் 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் காலமாகி விட்டார். தற்போது தனது மகன் கிஷோர் குமார் (29) என்பரு டன் வசித்து வருகிறார். இவருடைய மற்றொரு மகன் ராம்குமார் மலேசியாவில் வேலை செய்கிறார். தனலட்சுமியும் அவரு டைய மகனும் வானகரத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்றனர். பின்னர் வெள்ளிக் கிழமை இரவு சுமார் 8  மணியளவில் வீடு திரும்பி யுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்படிருந்த 20 சவரன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டி ருப்பது தெரிய வந்தது. இது குறித்து தனலட்சுமி காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண் 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு அங்கு பதி வாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் அர்ஜுன் வர வழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டையில் வருவாய் துறை  தொடர்பான பணிகள்: ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, நவ.23 - உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை தொடர் பான பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.அந்த வகையில் உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரு வாய் துறை தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவார ணம் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை கள், கிராமக் கணக்குகள், கிராம வரை படம், பணியாளர்கள் எண்ணிக்கை, பதி வறையில் பராமரிக்கப்பட்டு வரும் அடங்கல் கணக்குகள், பசலி ஆண்டு கணக்குகள், பகிர்மான பதிவேடு,சிட்டா,பிறப்பு இறப்பு பதிவேடு, பழைய பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் குறித்தும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொது மக்களின் கோரிக்கை மனு க்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து பொது மக்களுக்கு கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து தெரி விப்பதுடன் பொதுமக்கள் கோரிக்கை மனுக் களுக்கு தொடர்ந்து விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறி வுறுத்தினார்.இந்த ஆய்வின்போது உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறை அலு வலர்கள் உடனிருந்தனர்.

விவோவின் புதிய ஒய்300 ஸ்மார்ட்போன் அறிமுகம் 

சென்னை, நவ. 23-   விவோ நிறுவனம் தனது ஒய் மாடல் வரிசையில் புதிய  ஒய்300 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து ள்ளது.  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் அழகிய தோற்றத்தில் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள் ளது. ஒய்300 5ஜி உட்பட ஒய்மாடல் ஸ்மார்ட்போன்களின் புதிய விளம்பர தூதராக இந்தி நடிகை சுஹானா கானை விவோ அறிவித்துள்ளது.  மிகவும் சக்திவாய்ந்த இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த புகைப்படம் எடுப்பதற்கு சோனி ஐஎம்எக்ஸ்882 பிரதான கேமரா மற்றும் ஏஐ ஆரா லைட் தொழில்நுட்பம் மற்றும்  2எக்ஸ் போர்ட்ரெய்ட் அம்சம் ஆகியவை இடம் பெற்றுள் ளது. 

செயல்திறன்மிக்க ஸ்மார்ட் போன்  ஐக்யூஓஓ 13 விரைவில் அறிமுகம்

சென்னை, நவ. 22-  உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 3-ந்தேதி அறிமுகம் செய்கி றது.  நவீன தொழில்நுட்பத்துடன் வெளிவரும் இந்த ஐக்யூஓஓ 13 ஆனது, மின்னல் வேகமான செயல்திறனை மேம்பட்ட கேமரா திறன்கள், கண்கவர் வடிவமைப்பு, நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள் மற்றும் அதிவேக காட்சி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சிறந்த  செயல்திறன், வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு ஒப்பிடமுடியாத அனு பவத்தை வழங்கும் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரி விக்கிறது.

கோட்டக்குப்பத்தில் குட்கா கடத்திய வெளி மாநில வாலிபர் கைது

கோட்டக்குப்பத்தில் குட்கா கடத்திய வெளி மாநில வாலிபர் கைது  விழுப்புரம்,நவ.23- விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டகுப்பம் ரவுண்டானா அருகில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார், வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது  அவ்வழியாக வந்த வந்த நான்கு சக்கர வாகனமான காரை நிறுத்திய போது  கார்  நிற்காமல் சென்றது. உடனடி யாக போலீசார் காரை தொடர்ந்து விரட்டிச் சென்று போலீசார்  சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர், காரை சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்ய ப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந் தது தெரியவந்தது. காரில் வந்த ராஜஸ்தான் மாநிலம் தேவாரம் மகன் ஆசாராம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 3 லட்சம் மதிப்புள்ள 274 கிலோ புகையிலை மற்றும் குட்கா  பொருட்கள் கைப்பற்றி, அவர் மீது வழக்கு பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தலுக்கு பய ன்படுத்தப்பட்ட காரை பறி முதல் செய்தனர். இச்சம்ப வம் பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சவக்குழி வெட்ட, மேளம் அடிக்க  கட்டாயப்படுத்துவோர் மீது வன்கொடுமை சட்டம்  சிபிஎம் கடலூர்  மாவட்டக்குழு வலியுறுத்தல்

கடலூர்,நவ.23 – கடலூர் மாவட்டத்தில் சவக்குழி வெட்டவும், மேளம் அடிக்கவும் கட்டா யப்படுத்துவோர்  மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது.  கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறு முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச்செயலாளர் மாத வன், மாநிலக்குழு உறுப்பினர் ராமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டம், டி. பவழங்குடி கிராமத்தில் சுமார் 200 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் பெரும்பான்மையானோர் தலித் அல்லா தோர் வசித்து வருகிறார்கள். இதே கிராமத்தில் பட்டியலின வகுப்பை சார்ந்த அரிகிருஷ்ணன் மகன் ஆகாஷை (17) கடந்த 5ஆம் தேதி சாவு மேளம் அடிப்பதற்கு அழைத்து ள்ளனர். அவர், நான் வரவில்லை என மறுத்து வந்த நிலையில் வலுக்கட்டா யமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆகாஷ் மீது மிகுந்த  வன்மத்துடன் இருந்த சில சாதி ஆதிக்க சக்தியினர்,  அவர் மீது நாட்டு வெடியை கொளுத்தி போட்டுள்ளனர். இதனால் படுகாய மடைந்த அந்த வாலிபர் ரத்தம் சொட்ட சொட்ட துடி துடித்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து ஆகாஷ் பெற்றோர் சார்பில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் ‘கொலையில்லா’ மரணம் என வழக்குப் பதிவு செய்து வழக்கை முடிக்க முயற்சி த்தனர். இதையடுத்து, ஆகாஷின் பெற்றோர் அரிகிருஷ்ணன் - சங்கீதா கடலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகி நடந்ததை கூறினர்.அதன் பிறகு, எஸ்சி- எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றவாளிகள் நான்கு பேரில் இரண்டு பேர் பாலசுந்தரம் என்ற வெள்ளையன், சிலம்பரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவாகியுள்ளார்.  இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆகாஷ் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நிவார ணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை வழங்க வேண்டும். தலைமறைவாகியுள்ள. மீதமுள்ள குற்றவாளிகளை பிடிப்ப தற்கு தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும். மக்கள் கூடும் விழாக்கள் - நிகழ்ச்சி களில் உயிருக்கே ஆபத்து விளை விக்கும் நாட்டு வெடிகள் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும். பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாவு மேளம் அடிப்பதற்கும், சவக்குழி வெட்டுவதற்கும், பட்டியலின மக்களை  கட்டாயப்படுத்துவோர் மீது  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாற்று இடம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 850 வீடுகள் இடிக்கப்பட்டு உடனடியாக மாற்று இடம் தருகிறோம் என்று சொல்லி சுமார் 7 ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக் காமல் ஏமாற்றி வந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 30  அன்று  சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவல கத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது. இதையடுத்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆலோசனையின் பேரில்  சாராட்சியர் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினார். 3 மாதம் அவ காசம் தாருங்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மாற்று இடம் தருகிறோம் என்று எழுத்து பூர்வமாக மூலம் உறுதி யளித்தார். ஆனாலும், இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடன டியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலை யிட்டு மாற்று இடம் கொடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற  மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.  இதனை சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில் தெரிவித்துள் ளார்.