districts

img

மக்கள் நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

புதுச்சேரி, ஆக.12- மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யக்கோரி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான தாக்கல்  செய்துள்ள பட்ஜெட்டில்,  அதி கரித்து வரும் வேலையின்மை, வருவாய் இழப்பு ,விவசாய நெருக்கடி உள்ளிட்ட  மக்கள் பிரச்சனைகளைப் பற்றி தீர்ப்ப தற்கு எந்தவித திட்டங்களை யுகம் அறி விக்கப்படாததை கண்டித்தும்,மக்கள் நலத் திட்டத்திற்கு கூடுதல்  நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி இப்போராட்டம் நடை பெற்றது. இதில சிபிஐ  மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், விசிக  முதன்மை செயலாளர் தேவபொழிலன்,சிபிஐ,எம்எல் கட்சியின் மாநில செயலாளர் புருஷோத்தம்மன் ஆகி யோர் தலைமை தாங்கினார். இடது சாரிகள்,விசிக கட்சிகளின் நிர்வாகிகள் பெரு மாள், ராமச்சந்திரன்,நாரா.கலை நாதன்,கீதநாதன்,தலையாரி, தமிழ்மாறன் உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாக சட்டப்பேரவை அருகே வந்தவர்களை காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.