கள்ளக்குறிச்சி, ஆக.17-
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவி லூர் அருகே உள்ள வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் சத்தம் கேட்பதற்கு முன்பு அப்பகுதியில் இரண்டு ராணுவ விமா னங்கள் பறந்து கொண்டிருந்த தாக கூறப்படு கிறது. இதனால் விமானங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என தகவல் காட்டுத்தீ போல பர வியது.
இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், பகண்டை கூட்டு ரோடு காவல் ஆய்வாளர் பாலாஜி, வனத்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் தலை மையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி யுள்ள கிராமங்களில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.
ஆனால் எந்தவித தடயமும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் இரவு 8 மணிக்கு சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இதுபோல் பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில், இது குறித்து இந்திய விமானப்படை விமான தளம் சூலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் விசாரித் ததில், இது வழக்கமான விமானப்படை பயிற்சி நடைமுறை என்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் உறுதி செய்யப்பட்டது.
எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் கள்ளக் குறிச்சி மாவட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர்.