சென்னை, செப். 11- வள்ளலார் நகர் வண்ணா ரப்பேட்டை நடைபாதை சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் 24ஆவது ஆண்டு பேரவை டி.வெங்கட் தலை மையில் தங்கசாலை அச்ச கம் அருகே தோழர் ஏ.கே.ஷாஜகான் நினைவரங்கில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.கே.மகேந்திரன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். எம்.தமீம் சேட்டு வேலை அறிக்கை, வரவு,செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தின் செயல் தலைவர் கே.பல ராமன், மாவட்ட பொருளா ளர் எஸ்.கோபால கிருஷ்ணன், துணைத் தலைவர் பொ.பூபதி, துணைச் செயலாளர் எஸ்.அறிவழகன், மாநகராட்சி விற்பனைக்குழு உறுப்பினர் ஜி.மோனிஷா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக ஏ.சித்திக் வரவேற்றார். எஸ்.லட்சுமி நன்றி கூறினார். தீர்மானங்கள் தங்கசாலை பேருந்து நிலையத்தில் குடிநீர், இருக்கை உள்ளிட்ட அடிப் படை வசதிகளை ஏற்படுத் தித் தர வேண்டும், நடை பாதை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி கடைகள் கட்டித் தர வேண்டும், விளையாட்டு திடலில் சிசி டிவி கேமிரா அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தலைவராக டி.வெங்கட், செயலாளராக எம்.தமீம் சேட், பொருளாளராக சிவக் குமார் உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.