பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளை தனித்துவத்துடன் அடையாளப்படுத்தும் வகையில் புதிய இலச்சினை வெளியிடும் நிகழ்வு செவ்வாயன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு இலச்சினையை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், கல்வி நிலைக்குழுத் தலைவர் த. விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.