districts

img

பேருந்து மீது விழுந்த  மெட்ரோ ரயில் தூண்

சென்னை, செப்.27- பூந்தமல்லி நெடுஞ்சாலை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இதனால், அங்கு கிரேன் மூலம் ராட்சத தூண்கள் நடும்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று (செப். 27) அதிகாலை குன்றத்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று போக்கு வரத்து ஊழியர்களுடன் ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ராமா புரம் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவித மாக கிரேன் மூலம் தூக்கப்பட்ட ராட்சத தூண் பேருந்து மீது விழுந்தது. மேலும் அந்த வழியாக சென்ற லாரி மீதும் விழுந்தது. இதில், பேருந்து நடத்துநர் ஐயாதுரை (52), ஓட்டுநர் பூபாலன் (45), லாரி ஓட்டுநர் ரஞ்சித்குமார் (30) மற்றும் பேருந்தில் சென்ற 3 பேர் உட்பட மொத்தம் 6 பேர் காய மடைந்தனர். தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு சென்ற பாண்டிபஜார் போக்குவரத்து காவல்துறையினர் காய மடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.