districts

img

இரட்டைமலை சீனிவாசன் நினைவிடத்தில் நூலகம் அமைக்கவேண்டும்

செங்கல்பட்டு,ஜூலை 7- இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப் பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள  கோழியாளம் கிராமத்தில் அவருக்கு முழு உருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும் என்று அறிவித்ததற் கிணங்க, அச்சரப்பாக்கத்தில் சர்வே எண் 314/41-ல் 0.40.50 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.2.17 லட்சத்தில் நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். ஞாயிறன்று (ஜூலை 7) திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் 165 வது பிறந்த நாளினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை யில் அமைச்சர் தா. மோ.அன்பரசன் அரசின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தார்  இந்நிலையில் இரட்டமலை சீனிவாச னின் 165 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் மாவட்ட செயலாளர் க.புரு ஷோத்தமன் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.  இதனைத் தொடர்ந்து இரட்டமலை சீனி வாசன் நினைவு மண்டபத்தில் குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.மேலும் தமிழக அரசு அறிவித்த நூல கத்தை கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் உடனடியாக துவங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை க்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.வெள்ளிக்கண்ணன், தமுஎகச மாவட்டப் பொருளாளர். என்.டி.அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலாளர். மு.முனிச்செல்வம், வாலிபர் சங்கத்தின் சித்தாமூர் ஒன்றிய தலைவர் பா.கா.சத்தியா, செயலாளர். மருத்துவர்.ராமசாமி, பொருளாளர். பிரதாப், சிபிஎம்  கிளை செயலாளர்கள் அய்யப்பன், பிரேம்குமார், சிபிஎம் முன்னாள் செய்யூர் வட்டக்குழு உறுப்பினர்கள் விநாயகம், ஸ்டாலின்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.