வாசிப்பை நேசிப்போருக்கான அறிவுத் திருவிழா, 48ஆவது சென்னைப் புத்தகக் காட்சி வெள்ளியன்று (டிச.27) நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் தொடங்கியது. புத்தகக் காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பெருநகர சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணைமேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.