ராணிப்பேட்டை, ஜன. 30 – ராணிப்பேட்டை மாவட்டம், ஆட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வாதிகாரியாக செயல்படும் ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரு கின்றனர். இளங்கலை (பிஏ) ஆங்கிலம் துறை 2 ஆம் ஆண்டு பயின்று வரும் தீபக் என்ற மாணவரை புதனன்று (ஜன.29) சக மாணவர்கள் மத்தியில் ஆங்கில துறைத் தலைவர் பேராசிரியர் சாமுவேல் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அடித்த தாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய மாணவர் மன்றம் சார்பில் வியாழன்று (ஜன.30) கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை அச்சுறுத்தல்கள் மீறி கல்லூரி நுழைவு வாயில் வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, கல்லூரி யில் சர்வாதிகார போக்கில் செயல்படும் பேராசிரியர் சாமுவேல் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் அச்சுறுத்தி மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மாநில இணைச் செயலாளர் பாரதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், மாவட்ட பொறுப்பாளர் சிவராம கிருஷ்ணன், அப்பு, தமிழ்வாணன், சாணக்கிய ராஜ், அனைத்திந்திய மாணவர் மன்றம் மாநில துணைத் தலைவர் பிரகாஷ், தென்சென்னை மாவட்ட செய லாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.