திருவள்ளூர்,ஜூலை 23- குடியிருக்கும் வீடு களை அராஜகமாக அகற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து கட்சி சார்பில் செவ்வாயன்று (ஜூலை 23), திருவள்ளூர் ரயில் நிலையம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், எஸ்.வி.ஜி.புரத்தில் 113 குடும்பங்களுக்கு வரு வாய்த் துறையால் பட்டா வழங்கப்பட்டது. இதில் 54 வீடுகள் கட்டப்பட்டது. அந்த வீடுகளை கடந்த ஜூன் 4 அன்று எந்த அறிவிப்புமின்றி ஆட்சி யரின் உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் காவல்துறையினர் உதவி யுடன் ஜேசிபி இயந்தி ரங்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். அதே நாளில் கும்மிடிப் பூண்டி வட்டம், தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரையில் ஒரு வீட்டை அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது, வீட்டின் உரிமையாளர் வேறு இடம் இல்லாததால் எப்படி வாழ்வது என்ற விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிப்பதில் ஆட்சியர் அவசரம் காட்டு கிறார். மக்கள் நலனுக்கும், ஆட்சிக்கும் விரோதமாக செயல்படும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை மக்களோடு தொடர் பில்லாத துறைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. இதற்கு மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு, விசிக மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், கிழக்கு மாவட்ட செயலாளர் சி.நீலமேகம், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.பன்னீர் செல்வம் ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம்புராஜன் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்பு ராஜன் பேசுகையில், திரு வள்ளூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மக்கள் வாழும் வீடுகளில் இடித்து தரைமட்டமாக்குகின்றனர். இந்த சட்டவிரோத செயலை, தலைமையேற்று நடத்துவது வருவாய்த்துறை யாகும். அதற்கு வழி காட்டுவது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தான். ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்றுகின்றனர் எஸ்.வி.ஜி.புரத்தில் 2000ம் ஆண்டு கொடுத்த பட்டாக் கள் கையில் உள்ளது தோராய பட்டா தான். இது வரை மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. மக்கள் குடியேற குறைந்த பட்ச அடிப்படை வசதி கூட செய்து கொடுக்கவில்லை. 54 வீடுகளை அதிகாலையில் இடித்து தள்ளியுள்ளனர். தமிழ்நாட்டில் 1965 நில திருத்த சட்டம் அமலில் இருக்கிறது.ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடியேற தேவையான வசதிகளை வருவாய்த்துறையும், அரசும் செய்து கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை கொடுத்துள்ள குடிமனை பட்டாக்களில் 70 விழுக்காட்டினர் குடியேற முடியவில்லை. எந்த வசதியும் அரசு செய்து கொடுக்கவில்லை என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாடு குழு தலைவர் ப.சுந்தரராசன் பேசுகையில், ஒரு அநியாயம் நடக்கிற போது, மக்களுக்கு எதிர்கின்ற துணிவு வரவேண்டும். மாவட்ட ஆட்சியரின் அராஜகத்தை, எதிர்ப்பதற்கு மாவட்டத்தில் உள்ள ஜனநாயக இயந்திரங்கள் முன்வர வேண்டும், வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து பத்திரிகை மற்றும் வலைத்தளங்களில் செய்தி வருகிற போது உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து பேசுவது தான் ஜனநாயகம். இந்த குறைந்தபட்ச நடைமுறையை ஆட்சியர் கடைபிடிக்க வேண்டும் என்றார்.