திருவள்ளூர், ஆக. 17- வழுதலம்பேடு கிராமத்தில் சீல் வைக்கப் பட்டுள்ள எட்டியம்மன் கோயிலை திறந்து ஆதிதிராவிட மக்கள் வழிபாடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதலம் பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் ஆதிதிராவிட மக்கள் வழிபாடு செய்ய விடாமல் ஒரு பிரிவினர் அண்மையில் தடுத்த னர். இதனைத் தொடர்ந்து கோயிலை இழுத்து மூடி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். இந்நிலையில் வெள்ளியன்று (ஆக.16) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்பு தலைவரும் முன்னாள் மாவட்ட உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் சிபிஎம் சார்பில் திருவள்ளூரில் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறுகை யில், வழுதலம்பேடு கிராமத்தில் சீல் வைக்கப்பட்டுள்ள எட்டியம்மன் கோயிலை திறந்து ஆதிதிராவிட மக்கள் வழிபாடு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு உரிமையில் தலையிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் தண்டனை பெற்றுத்தரப் படும். கோயிலுக்கு செல்லும் பாதைக்கும் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோ பால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ்அரசு, கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், மாவட்டத் தலைவர் இ.எழிலரசன், மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், பொருளாளர் எம்.சிவக்குமார், வழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஜி.சரவணன், எம்.பூபாலன், சி.கோவிந்தன், இ.திலிப்குமார், ஆனந்தன், சிவராஜ், முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.