districts

img

தென்பெண்ணை ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து

கடலூர், ஜுன்.2- கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் தென்பெண்ணை ஆற்றில் கார் கவிந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் 5 பேர் நீந்தி உயிர்தப்பினர். சனிக்கிழமை இரவு புதுச்சேரியை இணைக்கும் தரப்பாலத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூரில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்த நிலையில் கார் தென்பெண்ணை ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.கார் கவிந்த வேகத்தில் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதை அடுத்து காரில் பயணம் செய்த 5 பேர் கதவை உடைத்து தண்ணீரில் நீந்தி உயிர் தப்பினர்.  இந்த தகவல் அறிந்த ரெட்டிச் சாவடி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தண்ணீரில் மூழ்கிய கார் ஞாயிற்றுக்கிழமை பொக்களின் எந்திரன் மூலம்  மீட்கப்பட்டது.

;