கழிவறை அருகே சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை
அம்பத்தூர், ஆக. 22- அம்பத்தூர் மண்ணூர்பேட்டை பிள்ளை யார் கோயில் தெருவில் உள்ள 3 மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. இங்கு 43 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் புதனன்று மாலை குடியிருப் பின் முதல் தளத்தில் உள்ள கழிவறைக்கு அருகே காற்று வசதிக்காக அமைக்க ப்பட்டிருந்த ஜன்னலிலிருந்து துர்நாற்றம் வீசியது. குடியிருப்பு வாசிகள் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை, இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசார ணையில், குடியிருப்பில் கர்ப்பிணிகள் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் வெளியாட்கள் யாரேனும் குழந்தை யின் உடலை வீசிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
ஆண்களுக்கான புதுமையான ஆடை தொகுப்புகள் அறிமுகம்
சென்னை, ஆக.22- இந்தியாவில் ஆண்க ளுக்கான பிரீமியம் ஆடை கள் பிராண்டாக திகழும் பிளாக்பெர்ரிஸ்,விளம்பர தூதரும்,கிரிக்கெட் வீர்ரு மான ருதுராஜ் கெய்க்வாட் உடன் இணைந்து, தனது புதிய டெக்ப்ரோ கலெக்ஷன் ஆடை ரகங்களை அறிமுகப் படுத்தியது. ஒவ்வொருவரின் வசதிக்கு ஏற்பஇந்த ஆடை கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது, நீட்டிக்கக்கூடிய தன்மை, சுருக்க எதிர்ப்பு மற்றும் ஸ்மார்ட்-ட்ரை தொழில் நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. டி-ஷர்ட்கள் மற்றும் காக்கிகள் முதல் சட்டைகள், பேண்ட், பிளேசர்கள் மற்றும் அனைத்து பருவ நிலைக்கு ஏற்ற ஜாக்கெட்டுகள் வரை, என ஒவ்வொருவரின் தனிப் பட்ட தேவைகளுக்கு ஏற்ற வாறு பல்வேறு விதமான மாடல்கள் டெக்ப்ரோ கலெக்ஷனில் உள்ளது.
பட்டரைவாக்கம் மேம்பாலத்தில் இருந்து ஏரிக்குள் விழுந்த வாகனம்
அம்பத்தூர்,ஆக.22- அம்பத்தூர் பகுதியில் இருந்து கோயம்பேடு நோக்கி புதனன்று வந்த சரக்கு வேன் பட்டவாக்கம் மேம்பாலத்தில் எதிரே வந்த கார் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து சுமார் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள கொரட் டூர் ஏரிக்குள் விழுந்தது. இதற்கடையே கொரட் டூர் ஏரிக்குள் சரக்கு வாகனத்தில் பின்பகுதி மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் காவல் தகவல் தெரிவித்தனர்.
வழிபாட்டு உரிமையை மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்
முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை
திருவள்ளூர், ஆக 22- கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் வழிபாடு செய்ய பட்டிய லின மக்கள் புறக்கணித்த விவகாரத்தை முதல்வவரிடம் கொண்டு செல்ல உள்ள தாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். கும்மிடிப்பூண்டி பகுதியில் யூனிக் லூப்ஸ் அண்ட் கிரேசியஸ் எனப்படும் எஞ்சின் ஆயில் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை யின் திறப்பு விழாவில் திருமா வளவன் பங்கேற்றார். அப்போது கும்மிடிப் பூண்டி அடுத்த வழுதிலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோவில் வழிபாட்டில் பட்டியலின மக்கள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் விடுதலை அவரிடம் முறையீட்டு மனுக்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் திருமா வளவன் கூறியதாவது: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் பல்லாண்டு காலமாக தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைய முடியாத நெருக்கடிகள் நீடிக்கிறது. 2001 ஆம் ஆண்டு விசிக சார்பில் போராட்டம் நடத்தினோம். அப்போது அதிகாரிகள் உடனிருந்து ஆதிதிராவிட பொதுமக்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் அந்த கோவிலில் திறக்காமலே வைத்திருந்தனர். பத்தாண்டுகளுக்கு பிறகு திறந்து விழா நடத்தும் போது மறுபடியும் பட்டியலின மக்கள் அந்த கோவிலுக்குள் நுழையக்கூடாது என அதிகாரிகள் முன்னி லையிலேயே கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று இழிவாக பேசி அவமதித்து இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர ஒருவர் மீதும் கூட நடவடிக்கை இல்லை. காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வழிபாடு செய்வதற்கு உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும் மேலும், இது போன்ற பிரச்சனைகளை அவ்வப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இந்த பகுதியில் நடந்த சம்பவம் குறித்தும் தொகுத்து முதல் வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் அழைப்பு மையத்தில் உளவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை
சென்னை, ஆக.22- கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ‘ஆப்செட் பிசினஸ் சொல்யூஷன்’ என்ற பெயரில் தனியார் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. சுமார் 800 பேர் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். முன்னணி தனியார் வங்கிகளில் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் தொடர்பு கொண்டு கடன் களை திருப்பி செலுத்தும்படி கூறுவார்கள். ஒன்றிய அரசின விதி முறைகளை மீறி செல்போன் சிம்கார்டுகளை சிம்டூல் பாக்சில் பயன்படுத்தி லாபம் பெறும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படுவதாக வோடபோன் நிறுவன அதிகாரி பிரபு புகார் செய்ததையடுத்து மத்திய உளவுப் பிரிவு மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் குழுவினர் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் போது சிம்கார்டுகளை சட்ட விரோதமாக பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விரைந்து சென்று சட்ட விரோதமாக பயன்படுத்திய சிம் டூல் பாக்ஸ்-83, மானிட்டர்-1, சிபியு-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
குழந்தையை கொன்ற தாய் கைது
கடலூர், ஆக.22 கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறு நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி ராஜ் (24) செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலி தொழி லாளி. அவருக்கு வடலூர் செல்லியம்மன் கோவில் பின்புறம் வசிக்கும் ராஜேஸ்வரி (21) என்ப வருக்கும் பழக்கம் ஏற்ப ட்டது. பின்னர் இரு வரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ராதிகா (3), லாவண்யா (5 மாதம்) என இருப் பெண் குழந்தை கள் உள்ளனர். மணிராஜ் வெளியூரில் தங்கி ஆடுகள் மேய்த்து வருகிறார். ராஜேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் வட லூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ராஜேஸ்வரி காவல் நிலை யத்தில் தன்னுடைய கைக்குழந்தையை கண வர் இரண்டு பேருடன் வந்து தூக்கிச் சென்று விட்டார் என்று புகார் மனு கொடுத்தார். விசா ரணையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத தால் ராஜேஸ்வரியே கழுத்தை நெரித்து கொன்று சாக்கடையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
சிபிஎம் போராட்டம் எதிரொலி
ரேசன்கடை கட்டிடம் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி, ஆக.22- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எடைக்கல் கிராமம். இங்கு வசிக்கும் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி யில் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். பிற சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் 30 குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் உள்ள னர். ஆனால், நியாய விலைக்கடை இந்தப் பகுதியில் இயங்கி வந்தது. இதை, அதிக அட்டைகள் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்ற வேண்டும். அதுவரைக்கும் பகுதி நேர கடைக்கு அனுமதிக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இதையடுத்து, பகுதி நேர கடை அமைக்கப்பட்டது. தற்பொழுது எடைக்கல் கிராமத்தில் நிரந்தரமாக முழு நேர நியாய விலைக் கடைக்கு புதிய கட்டிடம் கட்டு வதற்கு நிதி ஒதுக்கப்பட்டு. அந்த கட்டிடத்தை 40 அட்டை தாரர்கள் மட்டும் உள்ள பகுதியில் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்தனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், பட்டிய லின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் நியாய விலைக்கடை நிரந்தரமாக அமைத்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செய லாளர் ஆர்.சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் வேலா. பாலகிருஷ்ணன், ஆனந்தகுமார், தணிகாசலம், சின்னதுரை, பிரகாஷ், ராமதாஸ் உடனிருந்தனர்.
கூட்டுறவு சங்கத்தில் ரூ. 46 லட்சம் மோசடி: செயலாளர் கைது
ராணிப்பேட்டை, ஆக. 22 - ராணிப்பேட்டை, மாவட்டம் ஆற்காடு வட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 46.32 லட்சம் முறைகேடு செய்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் செல்வராசுவை (38) கைது செய்த வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 2019 முதல் 2021 வரையிலான நிதியாண்டில் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் செல்வராசு சிலரின் உதவியுடன் பண மோசடி நடைபெற்றது புகார் எழுந்தது. இது தொடர்பாக பால்வளத்துறை அதிகாரிகள் அப்போது தணிக்கை செய்து புகார் அளித்தனர். அதன் பேரில், விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ரூ. 46.32 லட்சம் போலி கணக்குகள் மூலம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.