சென்னை, பிப். 3- புது வண்ணாரப்பேட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் ஆறடி நீள பாம்பு பிடிபட்டது. புது வண்ணாரப்பேட்டை ஏஇ கோவில் தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையம் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தை கள் படிக்கின்றனர். இவர்க ளுக்கு தினசரி உணவு வழங்கப்பட்டு, வகுப்புக ளும் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் திங்கட்கிழமை காலை இந்த மையத்தை திறக்க வந்த ஊழியர், சமையல் அறையில் 6 அடி நீள பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை பிடித்து சென்றனர்.