districts

ரூ.2000 நோட்டு தருவதாக காவல் உடையில் ரூ.40 லட்சம் பறித்த 4 பேர் சிறையில்அடைப்பு

வேலூர், ஜூன் 11-

      திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (26). இவர் மின்வாரிய ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இதேபோல் ராமநாத புரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் முகமது ஜமீல் (28). ஐடி கம்பெனி ஊழியர்.  

     கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் தனித்தனியாக இவர்களின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அவர் பெங்களூருவை சேர்ந்த குமார் என்றும் ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் 4 மடங்காக  ரூ.2000 நோட்டுகளை தருவ தாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதனை உண்மை என நம்பிய இரு வரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணம் வீட்டில் இருந்த நகைகள் அடகு வைத்தும் மற்றும் நண்பர்கள் உறவினர்களி டமிருந்து கடனாக பணத்தை வாங்கி யுள்ளனர்.

    இவர்களில் ஞானபிரகாஷ் தான் வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்துடன் கடந்த 4 ஆம் தேதி வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த குமார் அந்த பணத்தை வாங்கி பார்த்துள்ளார்.  

    அப்போது காரில் இருந்து போலீஸ் உடை யில் இறங்கிய நபர்கள் உங்களிடம் உள்ளது ஹவாலா பணமா?  என சோதனை செய்ய வேண்டும் என்று ஞான பிரகாசை காரில் ஏற்றுக்கொண்டு காஞ்சி புரம் செல்லும் வழியில் கீழே தள்ளி விட்டுள்ளனர்.

    இதேபோல் முகமது ஜமீல் வேலூர் மாங்காய் மண்டி அருகே ரு.15 லட்சத்துடன் காத்திருந்துள்ளார். அங்கும் காரில் போலீஸ் உடையில் சென்றவர்கள் முகமது ஜமீனிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளு மாறு கூறியுள்ளனர்.பின்னர் முகமது ஜமீல் வடக்கு காவல் நிலையம் சென்று விசாரித்த போது பணத்தை பறித்துச் சென்ற வர்கள் போலிகள் என்பது தெரியவந்தது.  

    இதுகுறித்து ஞானபிரகாஷ் மற்றும் முகமது ஜமீல் ஆகியோர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

     ரூ.40 லட்சம் மோசடி செய்தது பெங்க ளூருவை சேர்ந்த டேனியல், அருண்குமார், அம்ரோஸ், கிருஷ்ணகிரியை சேர்ந்த கண்ணன் என தெரியவந்தது. அவர்களை பெங்களூரில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து  ரூ 2.30 லட்சத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.