சென்னை,ஆக.26-
திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் வரையி லான நெடுஞ்சாலை வெளி வட்ட சாலையாக அகலப் படுத்தப்படுகிறது. இரு வழிச் சாலையாக இருக்கும் இந்த சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக பாக்கம் புதுக் காலனி பகுதியில் 374 மரங்கள் வெட்டப்பட்டுள் ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்ட பசுமை குழு மரங்களை வெட்ட அனு மதி வழங்கியுள்ளது. அதே போல் வனத்துறை ஒப்புதல் பெற்று மதிப்பீடுகள் தயார் செய்து முறைப்படி டெண்டர் விடப்பட்டு மரங்கள் வெட்டப் பட்டன.