ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து கடலூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் எம்.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் மார்பன், சிவராஜ், பொன்மணிகண்டன், அன்சாரி, சரண்ராஜ், யுவராஜ், சுபாஷ் சந்திரபோஸ், ரஞ்சித்குமார், அறிவழகன், சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.