districts

img

20 குட்டிகளை ஈன்ற 2 அனகோண்டா பாம்புகள்

வண்டலூர்,ஜூலை 23- சென்னையை அடுத்து வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்  அரியவகை 2அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றெடுத்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா பாம்பு 9 குட்டிகளை ஈன்றது. இதேபோன்று மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளை ஈன்றுள்ளது. ஆக மொத்தம் இரண்டு அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் பூங்காவில் பணிபுரிந்து வரும்  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த அழகான குட்டிகளை பூங்கா ஊழியர்கள் தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர்.