ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 விழுக்காடு உயர்த்துவதாக நிதியமைச்சர் அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் கோட்ட அலுவலக முன்பு கிளைத் தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமன், கோட்ட துணைத் தலைவர் குணாளன், இணைச் செயலாளர்கள் ரமேஷ்பாபு, பாலகுமாரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.