திருவண்ணாமலை, அக். 9 – திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என திரு வண்ணாமலை – துரிஞ்சாபுரம் சிபிஎம் ஒன்றிய மாநாடு வலியுறுத்தி யுள்ளது. புதனன்று (அக்.9) வேங்கிக் கால் சிங்காரவேலர் அரங்கத்தில் நடைபெற்ற ஒன்றியத்தின் 7வது மாநாட்டில் கொடியை மூத்த உறுப்பினர் சந்திரசேகரன் ஏற்றினார். கே.இளங்கோவன் வரவேற்றார், அசோகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஜி.பன்னீர் செல்வம், அழகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் எஸ்.ராதாஸ் வாசித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இரா.பாரி வாழ்த்தி பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் நிறைவுரையாற்றினார். பி.சத்யா நன்றி கூறினார். ஒன்றியக்குழு தேர்வு 9 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக ஜி.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து அறுவை சிக்கிச்சைக்கான மருத்துவர்களை நியமித்து, நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்தி பாசன வசதியை ஏற்படுத்த வேண்டும், அருணாச்சலம் சர்க்கரை ஆலை விவசாயி களுக்கு தரவேண்டிய ரூ.11 கோடியை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.