சிதம்பரம், பிப். 27- விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைக்காக கடைகளை இடிக்க சிபிஎம் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம், பெரியப்பட்டு பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிக்காக கையகப் படுத்தப்பட்ட இடங்களில் உள்ள வீடுகள், கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை யினர் நடவடிக்கை எடுத்தனர். அப்போது புதுச்சத்திரம் பகுதியில் வசித்த பொதுமக்கள் சிபிஎம் தலைமையில் கடந்த 3 மாதத்திற்கு முன் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் இடத்தின் மதிப்பை விட 5 முதல் 10 மடங்கு பணம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் குறைந்த தொகை வழங்கப் பட்டுள்ளது. எனவே உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறையி னர் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை இடிக்க வந்தனர். அப்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்ஜி.ரமேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் விஜய், விவசாய சங்க தலைவர் கொளஞ்சி ஆகியோர் அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் உரிய இழப்பீடு வழங்கினால் காலி செய்வதாகவும், காலி செய்ய உரிய அவகாசம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த னர். இதனைதொடர்ந்து நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடத்தில் உள்ள வீடு, கடை களை அகற்ற 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் இழப்பீடு குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றனர்.