districts

img

உடுமலை ஒன்றியத்தில் வாலிபர்கள் பரப்புரை

திருப்பூர், செப். 5 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  மாநில மாநாட்டு விளக்க பரப்புரை பயணம்  உடுமலை ஒன்றியத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. உடுமலை ஒன்றிய தலைவர் ஆ.ராமசாமி  தலைமையில் உரல்பட்டியில் பரப்புரை பய ணம் தொடங்கியது. கமிட்டி உறுப்பினர் உரல்பட்டி கருப்புசாமி வரவேற்றார். இப்பய ணத்தை தொடங்கி வைத்து முன்னாள்  தாலுக்கா செயலர் கி.கனகராஜ் பேசினார். மாநாட்டு நோக்கங்களை விளக்கி சங்கத்தின்  திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.மணிகண் டன், ஒன்றியச் செயலாளர் சு.தமிழ்த்தென் றல், நிர்வாகிகள்  த.லோகேஸ்வரன், சி.மா சாணி உள்ளிட்டோர் பேசினர். இப்பய ணத்தை வாழ்த்தி விவசாயிகள் சங்க உடு மலை செயலாளர் ஏ.பாலதண்டபாணி, இந்திய மாணவர் சங்க திருப்பூர் மாவட்ட  தலைவர் பிரவீன், சிஐடியு உடுமலை  செயலாளர் எஸ்.ஜெகதீசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மலையாண்டி கவுண் டனூர், மருள்பட்டி , கண்ணம நாயக்கனூர்,  குரல்குட்டை, பள்ளபாளையம், ஜல்லிபட்டி ஆகிய மையங்களில் பரப்புரை நடை பெற்றது. முன்னதாக குரல்குட்டை பகத் சிங் கலைக் குழுவின் தப்பாட்டக் குழு வினர் அதிரடி இசை முழக்கம் நடைபெற்றது.  நிறைவாக ஜல்லிபட்டி அஜித்குமார்  நன்றி கூறினார்.

;