districts

img

உலக தொழிற்சங்க சர்வதேச நடவடிக்கை தினம்

திருப்பூர், அக்.3- உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (WFTU) சார்பில் அக் டோபர் 3ஆம் தேதி வியாழனன்று சர் வதேச நடவடிக்கை தினம் கடை பிடிக்கப்பட்டது. ஊதிய குறைப்பின்றி வாரத் திற்கு 35 மணி நேர பணி, பணி இடங் களில் சுகாதாரம் மற்றும் பாது காப்பு, சமூக பாதுகாப்புகளை உறுதி செய்வதோடு உலகளாவிய முறையிலான பொது நலம் மற்றும்  கல்வி ஆகியவற்றிற்கான வசதி, தர மான பணியிட மற்றும் வாழ்க்கை  சூழ்நிலை ஆகிய கோரிக்கைகளை  முன்வைத்து உலகளாவிய முறை யில் சர்வதேச நடவடிக்கை தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பாக நடை பெற்ற இயக்கத்திற்கு அகில இந் திய தொலைத்தொடர்பு ஓய்வூதி யர் சங்க நிர்வாகி விஸ்வநாதன்  தலைமை தாங்கினார். பழனிவேல் சாமி, பா.சௌந்தரபாண்டியன், கல் யாணராமன், சண்முகசுந்தரம், ஆகியோர் உரையாற்றினர். முன் னணி ஊழியர்கள் அண்ணாதுரை  மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள்  சங்கத்தினர் திரளாக கலந்து  கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத் தில் அருண்குமார் நிறைவுரை யாற்றி முடித்து வைத்தார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு சிஐடியு தொழிற்சங்க அலுவ லகத்தில் உலக தொழிற்சங்க சம் மேளனம் 79வது ஆண்டு விழா  கருத்தரங்கம் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு ஏஐடி யுசி மாவட்டத் தலைவர் ஜெயரா மன் தலைமை ஏற்றார். இதில், சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன் வரவேற்றார். ஏஐடியுசி மாவட்ட  பொதுச் செயலாளர் தனசேகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி உள்ளிட்டோர் உரை யாற்றினர். முடிவில், ஏசிசிடியு  மாவட்டச் செயலாளர் வெங்கடே சன் நன்றி கூறினார்.

தருமபுரி

உலக தொழிற்சங்க ஒருங் கிணைப்பு மையம் சர்வதேச நடவ டிக்கை தினத்தையெட்டி பிஎஸ் என்எல் எம்ளாயீஸ் யூனியன் சார் பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், பிஎஸ் என்எல் ஓய்வுபெற்ற அமைப்பின் மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல்  எம்ளாயீஸ் யூனியன் மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன் மாவட்ட  துணைத்தலைவர் ஆர்.பழனி, கிளைச் செயலாளர் சி.முனிராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.