ஈரோடு, மார்ச் 8- மொடக்குறிச்சி அருகே அருந் ததிய முதியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டம், சிவானந்த காலனி பகுதியில் வசிப்பவர் பழனி (எ) பழனிச்சாமி (65). அருந்ததிய சமூ கத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான இவரிடம், செல் லாத்தாபாளையம் பகுதியில் வசிக் கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது கரும்பு காட்டில் வேலை பார்க்குமாறு வற் புறுத்தியுள்ளார். அப்போது, தான் வேறு ஒருவர் தோட்டத்தில் வேலை செய்து வருவதாகவும், வேலை முடிந்த பிறகு தங்களது தோட்டத் திற்கு வந்து வேலை செய்வதாக வும் கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தில் வேலை நிறைவடையாததால், பெரியசாமியின் தோட்டத்தில் வேலை செய்வது தாமதம் ஏற் பட்டுள்ளது. இதனால் ஆத்திர மடைந்த பெரியசாமி, பழனிச்சாமி யின் வீட்டிற்கு சென்று அவரின் சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதன்பின்னரும் ஆத்திரமடங்காத பெரியசாமி தனது செருப்பை கழட்டி பழனிச் சாமியின் கன்னத்தில் ஓங்கி ஓங்கி அடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் அவரின் நெஞ்சில் காலை வைத்து மிதித்து மிக கொடூர மாக தாக்கியுள்ளார்.
இந்த திடீர் தாக்குதலில் நிழைகுழைந்த பழனிச் சாமியை, அருகிலிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கள் பழனிச்சாமியின் இடுப்பு பகுதி யில் உள்ள விலா எலும்புகள் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள னர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து அறிந்த தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உடனடியாக மொடக்குறிச்சி காவல்துறையினரின் கவனத்திற்கு தாக்குதல் சம்பவத்தை கொண்டு சென்றனர். இதனடிப்படையில், விரைந்து விசாரணை நடத்தி குற்ற வாளி பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய தலைவர் தங்கவேல், மார்க் சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் கனகவேல், கோவிந்தராஜ் ஆகி யோர், பாதிக்கப்பட்ட பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த னர். மேலும், சட்டரீதியான போராட் டத்தை மேற்கொண்டு குற்ற வாளிக்கு உரிய தண்டனை பெற்று தரும் வரை உடன் நிற்போம் என் றும் உறுதியளித்தனர்.