districts

உற்பத்தி செலவு அதிகரிப்பால் திணறும் நூற்பாலைகள்

கோவை, மே 26- நூல் விலை, இயந்திரங்களின் உதிரி பாகங்கள் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், 50  சதவிகித நூற்பாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பை தரும் தொழிலாக ஜவுளித்துறை உள்ளது. கோவை மாவட்டத் தில் கிராமப்புறங்களில் அதிகமான நூற் பாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பெருவாரியான கிராமப்புற பெண் தொழிலா ளர்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்ற னர்.  இந்நிலையில், சர்வதேச அளவிலான பொருளாதார மந்தநிலை மற்றும் நூல் மற் றும் துணி வகைகளின் ஏற்றுமதி குறைந் துள்ளது. நூல் மற்றும் துணி ஏற்றுமதியாளர் கள் உள்நாட்டிலேயே விற்பனை செய்கிறார் கள். இதனால் உள்நாட்டு நூல் விற்பனையில் ஏற்றுமதியாளர்களுடன் கடுமையான போட்டி நிலவுவதால் நூலுக்கு தகுந்த விலையை பெற முடிவதில்லை. இச்சூழ்நிலையை சாத கமாக்கிக் கொண்டு நூல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் வேறு வழி யின்றி நூற்பாலைகள் பெரும் நஷ்டத் திற்கு நூலை விற்று வருகிறார்கள். இதனால் நூற்பாலைகள் தொடர்ந்து இயக்க முடியாது சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக 50 சதவிகிதம் நூற்பாலைகள் மூடும் அபாயம் இருப்பதாக நூற்பாலை கூட்டமைப்பின் நிர்வாகிகள் வேதனை தெரி விக்கின்றனர்.

இதுகுறித்து கோவையில் சிறு நூற் பாலைகள் கூட்டமைப்பினர் கூறுகையில், 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஸ்பின் னிங் மில்கள் தற்போது நெருக்கடியை சந் தித்து வருகிறது. 50 சதவீதம் உற்பத்தி நிறுத் தப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக வங்கிகளின் வட்டி விகிதங்கள் 7.75 சத விகிதத்திலிருந்து பத்து புள்ளி 75 சதவிகி தம் வரை படிப்படியாக உயர்ந்துள்ளதால், நூல் உற்பத்தி செலவு 1 கிலோவுக்கு ரூபாய் ஐந்து முதல் ரூபாய் ஆறு வரை உயர்ந்துள் ளது. இதேபோன்று மின் கட்டண உயர்வும் அதிகரித்து வருகிறது. இயந்திரங்களின் உதிரிபாகங்கள், மின்சாதன பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் இடம் பெயர் வது உள்ளிட்ட காரணங்களால் மறைமுக செலவுகள் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில், ஸ்பின்னிங் மில் மற்றும்  ஓ.இ. மில்ஸ்களின் எண்ணிக்கை 1500 உள் ளன. சுமார் 1.60 கோடி ஸ்பிண்டிஸ் மற்றும் 10 லட்சம் ரோட்டர்கள் உள்ளன. தினமும் 70 லட் சம் கிலோ நூல்கள் தயார் செய்யப்படுகின் றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட் சம் தொழிலாளர்கள் வேலை செய்து வரு கின்றனர். தினமும் உற்பத்தி செய்யப்படும்  நூலின் மதிப்பு ரூபாய் 145 கோடி ஆகும். ரூ.10 கோடி வரை ஜி.எஸ்.டி. கட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 2.25 கோடி யூனிட்டுகள் மின் சாரம் பயன்படுத்தப்படுகிறது. 20 கோடி  வரை மின்கட்டணம் தினமும் கட்டுப்படு கிறது.

இந்நிலையில், சீனா, வியட்நாம், பங்களா தேஷ் போன்ற நாடுகளில் இருந்து நூல் மட் டும் துணி வகைகள் கட்டுப்பாடு இன்றி  இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள் ளது. இதனால் உள்நாட்டு ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரினா லும்,  உலக அளவில் மந்த நிலையில், உள் நாட்டு உற்பத்தி செலவு பலமடங்கு அதிக ரித்தாலும் சர்வதேச உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியவில்லை. ஒன்றிய அரசி டம் தொடர்ந்து இத்தொழில் உள்ள சிக்கலை  தெரிவித்து வருகிறோம். இதில், குறிப்பாக, ஒன்றிய அரசு உயர்த்தப்பட்ட வங்கிகளின்  வட்டி விகிதங்களை உடனடியாக பழைய நிலைக்கு 7.75 சதவிகிதம் அளவிற்கு குறைத்து கொடுக்க வேண்டும். குறுகிய கால கடனாக எமர்ஜென்சி கிரெடிட் லைன் கேரண்டி ஸ்கிம் இன் நிலுவை தொகையை மறு சீரமைத்து மீண்டும் புதிய கடனாக வழங்க வேண்டும். கடனை கட்ட இரண்டு ஆண்டு காலம் அவ காசம் நீடித்து கொடுக்க வேண்டும். நூல் மற் றும் துணி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்குவிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளோம். ஆனா லும், எந்த உருப்படியான நடவடிக்கையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை.

இதேபோன்று, தமிழக அரசும், தமிழக மின் உற்பத்தி கழகம் மேக்ஸிமம் டிமான்ட் கட்டணம் 90 சதவீதம் வசூலிக்கிறது. நூற் பாலை தொழிலின் அசாதாரண சூழ்நி லையை கருத்தில் கொண்டு உபயோகப் படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப மேக்சிமம் கட் டணத்தை வசூலிக்க வேண்டும். நூற்பாலைத் தொழில் 24 மணி நேரமும் மின்சாரம் நுகரப் படும் தொழில் என்பதால் பசுமை எரி சக் தியை ஊக்குவித்து மூலதனம் மானியமாக 15  சதவீதம் வழங்க வேண்டும் என தெரிவித்துள் ளோம். இந்த அசாதாரண சூழ்நிலையை கருத் தில் கொண்டு, தமிழகத்தின் ஒட்டுமொத்த ஜவுளி வளர்ச்சிக்கு குழு ஒன்று அமைத்து ஜவுளி தொழிலை மீட்டெடுக்க வேண்டும்.  இல்லையென்றால், தமிழகத்தில் மின் சார வருவாய் இழப்பு, சரக்கு மட்டும் சேவை  வரி வருவாய் இழப்பு போன்ற ஏராளமான இழப்புகள் ஏற்படும். நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான உள் ளூர் மட்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர் கள் வேலை இழக்கும் அபாய நிலை உரு வாகும், என்றனர்.