districts

img

ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும்

தருமபுரி, மே 7- தருமபுரியில் நடைபெற்று வரும்  ரயில்வே மேம்பால பணிகள் விரை வில் முடிக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் தகவல் தெரிவித் துள்ளார். தருமபுரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி களை தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் டி.என்.வி.செந்தில்குமார் நேரில்  ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப் பில் உள்ளதையடுத்து, ஒன்றிய ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரி களை தொடர்பு கொண்டு கேட்ட போது, கொரோனா தொற்று பரவல் மற்றும் பல்வேறு காரணங்களால் தாம தமானதாக தெரிவித்தனர். பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என பலமுறை அதிகாரிகளை சந் தித்து அறிவுறுத்தியதை தொடர்ந்து, தற்பொழுது மேம்பால பணிகள் நடை பெற்று வருகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் மேம்பால பணிகள் முழு வதும் முடிவடைந்து விரைவில் மக்கள்  பயன்பாட்டுக்கு வரும் என்றார். மேலும், கட்டப்பட்டு வரும் மேம் பாலம் வருங்காலத்தில் ரயில் பாதை விரிவாக்கம் செய்யும் வகையில் பாலப் பணிகள் நடைபெற்று வருகி றது. தருமபுரி ரயில் நிலையத்தில் லிப்ட்  வசதி ஏற்பாடு செய்ய டெண்டர் கோரப் பட்டுள்ளது. லிப்ட் வசதி அமையும் பொழுது முதியோர்கள் ரயிலில் சிரம மின்றி பயணம் செய்ய முடியும். தரும புரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக 2  கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பணிகளை மேற்கொள்ள நில அளவை அலுவலர்கள் நியமனம் செய் யப்பட்டு பணிகள் நடைபெறும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.