districts

img

வடிகால் கால்வாய்களை தூர்வாரும் பணி தீவிரம்

உடுமலை,அக்.21- வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் உடுமலை நகரில் இருக்கும் அனைத்து மழைநீர் வடிகால் கால்வாய்கள் மற்றும் நீர் ஓடைகளை தூர்வாரும் வேலைகளை உடுமலை நகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.  தற்பொழுது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் உடுமலை நகராட்சி பகுதியிலும் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில், நகரின் முக்கிய ஓடையாக இருக்கும் தங்கமாள் ஓடை மற்றும் கழுத்தறுத்தான் பள்ளத்தை கனரக இயந்திரங்களின் உதவியுடன் தூர்வராப்பட்டு வருகிறது. மழைநீர் கால்வாய்கள் மற்றும் நீர் ஓடைகளை தூர்வாரும் வேலைகளை உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் மற்றும் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.