districts

img

கணவனின் வீடு முன் பெண் தர்ணா

ஈரோடு, செப்.9- கணவனின் வீடு முன்பு இளம்பெண் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், பவானி அண்ணாநகரை சேர்ந்தவர் ஸ்ரீ  சிவரஞ்சனி(27). எம்சிஏ பட்டதாரி. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதே நிறுவனத்தில் பவானி,  அண்ணாநகரை சேர்ந்த மோகன்ராஜ் (28) பணிபுரிந்து வந்தார். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரி டையே பழக்கம் ஏற்பட்டு காதலிக்கத் தொடங்கினர். இதை யடுத்து, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு மோகன்ராஜனின் பெற்றோர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து மோகன்ராஜ் மனைவியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதுகுறித்து ஸ்ரீ சிவரஞ்சனி கடந்த ஜூலை  22ஆம் தேதியன்று பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எதுவும்  எடுக்கப்படவில்லை. இதனால் ஸ்ரீசிவரஞ்சனி கணவன்  வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இத்தகவறிந்த மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து ஸ்ரீசிவரஞ்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்  தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை  தன்னுடன் சேர்த்து வைக்கவேண்டும். இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு இருதரப்பி னரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்த சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;