கோவை, ஜன.12- தியாகி அப்பாய் நினைவு மன்றத்தின் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு “சிறகடித்து சிகரம் தொடு” நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டம், ரத்தினபுரி மினி ஹாலில் தியாகி அப்பாய் நினைவு மன்றத்தின் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு 31 ஆவது “சிறகடித்து சிகரம் தொடு” நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ் வில் மாணவ, மாணவிகளின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, செஸ் போட்டி ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை முன்னாள் மாமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன் னாள் தலைவருமான என்.ஆர்.முருகேசன் துவக்கி வைத்தார். இதில் வாலிபர் சங்க முன்னாள் தலைவர் கள் நாராயணசாமி, ஆனந்தன், பாரதி, ராமசுப்பிரமணி யம், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, துணைத்தலைவர் நா.ராஜா, வடக்கு நகரத் தலை வர் நிசார் அஹமத், செயலாளர் விக்னேஷ், பேராசிரி யர் அனுராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.