districts

தெருநாய்களால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு நடவடிக்கை என்ன?

தருமபுரி, ஆக.1- தெருநாய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன?  என தருமபுரி நகர்மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் உள்ள அறிஞர் அண்ணா கூட்டரங்கில் சாதா ரண நகர்மன்றக் கூட்டம் புதனன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சித் தலை வர் லட்சுமி நாட்டான் மாது தலைமை வகித் தார். நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் கூட்டத்தில் நிறை வேற்றப்பட உள்ள தீா்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். அதில், தருமபுரி நக ராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள பல் வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், புதிய திட்டப் பணிகளுக்கு நிதி  ஒதுக்கீடு செய்து அதற்கான பணி ஆணை  வழங்குதல், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உயர் மின் கோபுர விளக்கு அமைக்கும் பணிக ளுக்கு ஒப்புதல் வழங்குதல், பொதுக் கழிப்பி டம், இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைத்தல் உள்ளிட்ட 28 பணிகள் விவாதத்துக்கு எடுத் துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதன்மூலம் ரூ.65 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒப்பு தல் அளித்தனர். அதனைத்தொடர்ந்து நகர்மன்ற உறுப்பி னர்கள் கூறுகையில், தருமபுரி நகரில் அனைத்து வார்டுகளிலும் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், ஏராளமா னோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நக ராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு நகரில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களையும் தூர்வாரி, குப்பை தேங் காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும், என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதி லளித்து ஆணையர் பேசுகையில், நகரில்  சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடிப்பதற் காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு  நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்து சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என் றார்.