கோவை, பிப்.11- கோடை வெயிலை சமா ளிக்க இப்போதே, ஆனை மலை புலிகள் காப்பகம் வனப் பகுதிகளில் தண்ணீர் தொட்டி கள் சுத்தம் செய்யும் பணி யில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சர கம் பகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி கோட்டம், திருப்பூர் கோட்டம் உட்பட உள்ள 958 சதுர கிலோமீட்டர் வனபகுதியாகும். இப்பகுதி களில் காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி, மான் இனங்கள் காட்டுமாடு கருஞ் சிறுத்தை உள்ளிட்ட அபூர்வ வகை பாம்பு கள், பறவை இனங்கள் உள்ளன. தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில் வனப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வற்றி வருகிறது. மேலும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க வனத்துறையினர் நீர்த்தேக்க தொட்டி யில் அதிக அளவில் கட்டி உள்ளனர். தற் போது ஆனைமலை புலிகள் காப்பகம் பகு திக்குட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் போத்தமடை பீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி செவ்வாயன்று நடை பெற்று வருகிறது. இதில், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப் பக கள துணை இயக்குநர் பார்கவே தேஜா கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் வனவிலங்கு இடம் பெயர்ந்து தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வர கூடும். இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தாகம் தீர்க்க டிராக் டர் மூலம் தண்ணீர் நிரப்பப்படும். மேலும் வறட்சி தொடங்கியுள்ள நிலையில் வால் பாறை, டாப்சிலிப் செல்லும் சுற்றுலாப் பயணி கள் தீப்பற்றக்கூடிய பீடி, சிகரெட் மதுபானங் கள் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட் கள் வனப்பகுதியில் கொண்டு செல்லாமல் இருக்க ஆழியார், சேத்துமடை வன சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடை பெற்று வருகிறது என்றார்.