districts

img

செப்.20 ஆம் தேதி தண்ணீர் திறப்பு; வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்

 தாராபுரம், செப் - 6 தாராபுரம் பழைய அமராவதி ஆயக்கட்டு  பகுதியில் நெல் நடவுக்காக செப்.20 ஆம் தேதி  தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் பொதுப்ப ணித்துறை சார்பில் 4 வாய்க்கால்களும் தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தாராபுரம் பழைய அமராவதி ஆயக்கட்டு  திட்டத்தில் 8 ஆயிரத்து 330 ஏக்கர் பாசன வசதி  பெறுகிறது. இந்த பாசன திட்டத்தில் ஒரு போக  நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 20 ஆம் தேதி தண்ணீர் திறப்பது  வழக்கம். பொதுப்பணித்துறை சார்பில் தள வாய்பட்டினம் பாசன வாய்க்கால்களை தூர் வார்வதற்காக ரூ. 4 லட்சமும், அலங்கி யத்திற்கு ரூ. 4 லட்சமும், கொளத்துப் பாளை யத்திற்கு ரூ. 12 லட்சம், தாராபுரம் ராஜ வாய்க் காலுக்கு ரூ.9.95 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கனரக இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் தூர்வா ரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இப்பணிகள் முடிவடைந்ததும்  20ஆம் தேதி பழைய அமராவதி பாசனத்திற்கு தண் ணீர் திறந்து விட அரசுக்கு அறிக்கை அனுப்பப் படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் விவசாயிகள் நிலங்களை மேம் படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

;