districts

img

குந்தா அணையிலிருந்து 2 மாதங்களில் 8 முறை தண்ணீர் திறப்பு

உதகை, செப்.11- குந்தா அணை துார்வாரப்படாததால், இரு மாதங்களில் 8  முறை திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்துக்குட்பட்ட குந்தா  அணை 89 அடியை கொண்டது. இந்த அணையில் தேக்கப் படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் தினசரி 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய  முடியும். முக்கிய அணையாக கருதப்படும் குந்தா அணைக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதிகளில், தேயிலை, மலை காய் கறி தோட்டங்கள் பல ஏக்கரில் உள்ளது. பருவமழை காலங் களில் நீரோடைகளில் அடித்து வரும் சேறும், சகதியும் அணை யில் சேகரமாகிறது. பல ஆண்டுகளாக முழுமையாக தூர் வாரப்படாமல் உள்ளதால், சிறிய மழைக்கு அணை முழு கொள் ளளவை எட்டி விடும். தற்போது, தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 50 சதவிகிதம் கூடுதலாக பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக அணைக்கு விநாடிக்கு சராசரியாக 150 முதல் 200 கனஅடி நீர்வரத்து உள்ளது. கடந்த ஒரு வாரம் தொடர்ந்து பெய்த மழையால், குந்தா அணைக்கு விநாடிக்கு சராசரியாக 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தண்ணீர் தேக்கி வைக்க முடியாத காரணத்தி னால், சனியன்று காலை 8 மணி நிலவரப்படி இரு மதகுகளில், தலா 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 8 முறை அணை நிரம்பி திறக்கப்பட்டுள்ளது.

;