districts

img

டிஜிட்டல் பதிவேடு முறையை ரத்து செய் விதொச மாநாடு வலியுறுத்தல்

கோவை, ஜூலை 11–  நூறு நாள் வேலை திட்டத்தில் டிஜிட்டல் வருகை பதிவேடு முறையை ரத்து செய்துவிட்டு அன்றாட பதிவேடு முறையை  நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கத்தின் சுல்தான் பேட்டை ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள் ளது.  கோவை சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு ஞாயி றன்று நடைபெற்றது. வாரபட்டி சமூதாய நல கூடத்தில் நடை பெற்ற மாநாட்டிற்கு சி.திருமலைசாமி தலைமை தாங்கினார். கிளை உதவி தலைவர் பி.ரேவதி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கிவைத் சங்கத்தின் மாவட்ட செயலர் ஆர்.செல்வராஜ் உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி பல்லடம் ஒன்றிய விவசாய சங்க தலைவர் கே.வி.  சுப்பிரமணியம், விதொச கோவை மாவட்ட தலைவர் ஏ.துரை சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைசெயலா ளர் ஜே.ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.  முன்ன தாக மாநாட்டு வேலை அறிக்கையை தி.ரவிச்சந்திரன் முன் வைத்தார். இதில், நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். தின கூலி ரூ600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பழைய நிலையிலேயே வாரம் தோறும் சம்பளம் என்பதை  உறுதிசெய்ய வேண்டும். டிஜிட்டல் பதிவேடு  முறையை ரத்து  செய்து அன்றாட பதிவேடு முறையை அமுலாக்க வேண்டும். சுல்தான்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். வாரபட்டி வழியாக பேருந்துகள் வந்து  செல்ல வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள்  நிறைவேற்றப் பட்டது. இதனைத்தொடர்ந்து, சுல்தான் பேட்டை ஒன்றிய விதொச  தலைவராக எம்.ஆனந்தன், துணை தலைவராக பி.ரேவதி, ஆர்.கவிதா, செயலாளராக  தி.ரவிச்சந்திரன், துணை செயலா ளராக எஸ்.சுமதி, எஸ்.சுபலட்சுமி, பொருளாளர் ஆர்.செல்வ ராஜ் உள்ளிட்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.  மாநாட்டை நிறைவு செய்து விதொச மாநில துணை தலை வர் பி.வசந்தாமணி உரையாற்றினார். முடிவில் பி..ரவிதாஷ்  நன்றி கூறினார்.