கோவை, ஜூலை 21- மனநலம் குன்றியவர்கள் தான் கொலை யாளிகளாக மாறுகின்றனர் என மனநலம் குறித்த விழிப்புணர்வு மாரத்ததானில் கலந்து கொண்ட முன்னாள் காவல்துறையின் தலைமை இயக்குநர் ரவி செய்தியலா ளர்க்கு பேட்டி அளித்தார். பொதுமக்களிடம் மன ஆரோக்கியம் பற் றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன் பாக இந்திய மனநல மருத்துவ சங்கம் சார் பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியானது 3 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரி வாக நடைபெற்றது. போட்டியினை முன் னாள் காவல்துறையின் தலைமை இயக்கு நர் ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதனை தொடர்ந்து பேசிய ரவி செய்தி யாளர்களிடம் கூறியதாவது, மன நலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி இந்த மாரத் தான் நடைபெற்றது. போதை மருந்துக்கு அடி மையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மன நல ஆலோசனை மேற் கொள்ள வேண்டும். காவல்துறையின் நடவ டிக்கையால் தமிழகத்தை பொறுத்தவரை போதை பொருட்களின் புழக்கம் இப்போது குறைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை கட்டுப் படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்கள் திரைப்படங்களில் வன்முறையை நல்ல விச யமாக சித்தரிக்கப்படுவதால் ஒரு சில இளை ஞர்கள் பாதிக்கப்படலாம். மனநலம் குன்றி யவர்கள் தான் கொலையாளிகளாக மாறு கிறார்கள் என்றார்.